ஐபிஎல் 2022: டிசம்பரில் மேகா வீரர்கள் ஏலம் - தகவல்

Updated: Tue, Jul 06 2021 13:32 IST
IPL 2022 Mega Auctions Likely To Be In Held December With Two New Teams Added (Image Source: Google)

ஐபிஎல் 14வது சீசனில் 29 லீக் போட்டிகள் நடந்த நிலையில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து எஞ்சிய போட்டிகள் வரும் செப்டம்பர் - அக்டோபர் காலக்கட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளது.

இந்நிலையில் அடுத்த சீசனில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்படுவதால் அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. இதுவரை 8 அணிகள் ஐபிஎல்லில் விளையாடி வரும் நிலையில், அடுத்த சீசனில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்பட்டு 10 அணிகள் ஆடவுள்ளன. அதனால் அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது.

மெகா ஏலம் நடக்கவுள்ளதால், ஒவ்வொரு ஐபிஎல் அணிகளும் தலா 4 வீரர்களை (2 இந்திய வீரர்கள் + 2 வெளிநாட்டு வீரர்கள் அல்லது 3 இந்திய வீரர்கள் + 1 வெளிநாட்டு வீரர்) மட்டுமே தக்கவைத்துக்கொண்டு மற்ற வீரர்களை கழட்டிவிட வேண்டும். 

இதனால் அடுத்தாண்டு ஐபிஎல் தொடர் மீதான எதிர்பார்ப்பு தற்போதிலிருந்து ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டும் விதமாக அமைந்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை