ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

Advertisement

இப்போடியில் அக்ஸர் படேலின் காட்டடி ஆட்டம், லலித் யாதவின் பொறுப்பான பேட்டிங்கால் மும்பை இந்தியன்ஸ் அணியை  4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது டெல்லி கேபிடல்ஸ் அணி.

Advertisement

முதலில் பேட்செய்த மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் சேர்த்தது. 178 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் கடினமான இலக்கை துரத்திய டெல்லி கேபிடல்ஸ் அணி 10 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஆட்டநாயகன் விருது 3 விக்கெட் வீழ்த்திய குல்தீப் யாதவுக்கு வழங்கப்பட்டது.

டெல்லி அணியின் பந்துவீச்சுதான் சொத்தையாக இருந்தது என்றால் அதைவிட மோசமாக இருந்தது மும்பை அணியின் பந்துவீச்சு. அதிலும் பும்ரா, சாம்ஸ் தர்மபிரபுகளாக விளங்கினார். டெல்லியின் அணியின் வெற்றிக்கு காரணமாக விளங்கியவர்கள் பும்ரா, சாம்ஸ் என்றால் மிகையில்லை. இருவரும் சேர்ந்து 7.2 ஓவர்கள் வீசி 100 ரன்களை வாரி வழங்கினர். 

ஒரு கட்டத்தில் ஆட்டம் மும்பையின் கையில்தான் இருந்தது. அக்ஸர் படேல், லலித் யாதவ் கூட்டணியைப் பிரித்திருந்தால் ஆட்டம் மும்பை வசம் இருந்திருக்கும் ஆனால், இருவரையும் பிரிக்கமுடியாமல் மும்பை பந்துவீச்சாளர்கள் மகாமட்டமாகப் பந்துவீசினார்கள். 

அதிலும் சாம்ஸ் வீசிய 18ஆவது ஓவர்தான் ஆட்டம்தான் திருப்புமுனையாகும். இந்த ஓவரில் 3 சிக்ஸர், பவுண்டரி என 24 ரன்கள் சேர்த்து ஆட்டத்தை லலித், அக்ஸர் இருவரும் முடிவுக்கு கொண்டு வந்தனர். 

Advertisement

இந்நிலையில் இப்போட்டியில் பந்துவீச அதிகம் நேரம் எடுத்துக்கொண்டதாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News