நேற்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்து, இறுதிப் போட்டிக்கான குவாலிபயர் சுற்றுக்கு முன்னேறியது. இதையடுத்து வருகின்ற 23ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இறுதிப் போட்டிக்கான குவாலிஃபயர் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது.

Advertisement

இந்த முறை பிளே ஆஃப் சுற்றில் குவாலிஃபயர் மற்றும் முதல் எலிமினேட்டர் சுற்றுப்போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இது ஒரு அட்வான்டேஜ் ஆக அமையும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Advertisement

இதுகுறித்து சென்னை அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங்கிடம் கேட்ட பொழுது, “சென்னையில் உள்ள நிலைமைகள் குறித்து எங்களுக்கு இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. மற்ற ஆண்டுகளில் ஆடுகளம் எப்படி இருக்கிறது என்று எங்களுக்குத் தெரிந்திருந்தது. ஆனால் இந்த ஆண்டு அது கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிட்டது.

ஒவ்வொரு வருடமும் வித்தியாசமானது. கோவிட் வருடத்தில் ஒன்று இரண்டு விஷயங்கள் தவறாக இருப்பதாக நாங்கள் நினைத்திருந்தோம். ஆனால் நாங்கள் நன்றாக முடித்தோம். கடந்த ஆண்டு நாங்கள் சிரமப்படுவோம் என்று உணர்ந்தோம். இது ஒரு வருடத்திற்கு முன்பு வேலை செய்வது பற்றியது. விட்டுத் தருவது பற்றியது அல்ல. வீரர்களுக்கு வாய்ப்புகளைத் தருவது தேவையான இடங்களுக்கான தீர்வுகளை கண்டறிவது நாங்கள் திரும்பி வருவதற்கு உதவுகிறது. துஷார் தேஷ்பாண்டே இதற்கு சிறந்த உதாரணம். 

வீரர்களின் காயத்தால் வாய்ப்புகளை பெற்ற அவர் தன்னை நிரூபித்திருக்கிறார். டெவன் கான்வே அவர் தொடர்ந்து ரன்களை சீராகக் கொண்டு வருகிறார். அவர் எப்போதும் ஆடம்பரமாகத் தெரிந்ததில்லை ஆனால் ரன்களை பெறுவது மற்றும் வேலையைச் செய்யும் விதத்தில் அவரது தரம் உயர்தரமானது. தீபக் சஹாரின் ஃபார்ம் இப்பொழுது நம்பிக்கையாக இருக்கிறது. அவர் இன்று நன்றாகப் பந்து வீசினார். அவர் திரும்பி வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று காட்டினார்” என்று தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News