ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் லக்னோ அணிகள் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோதின. இந்த லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்தது ஆர்சிபி அணி. முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணிக்கு மிக மிகச்சிறப்பாகவே இன்னிங்ஸ் அமைந்தது. வந்த முதல் ஓவரிலிருந்து அடிக்க வேண்டும் என்கிற முனைப்புடன் விளையாடிய விராட் கோலி அரைசதம் கடந்து, 44 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் நான்கு சிக்ஸர்கள் என 61 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார்.

Advertisement

அடுத்து உள்ளே வந்த மேக்ஸ்வெல் வந்த வேகத்தில் ரன்குவிப்பில் ஈடுபட்டார். இதனால் 24 பந்துகள் அரைசதம் அடித்த அவரும் 59 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். கடைசிவரை களத்தில் நின்ற கேப்டன் டூ ப்ளசிஸ் 79 ரன்கள் அடிக்க ஆர்சிபி அணியின் ஸ்கோர் 212 ரன்களை எட்டியது. இந்த இலக்கை லக்னோ அணி எட்டுவதே கடினம் என்று பலரும் எண்ணினர். 

Advertisement

அதற்கேற்றவாறே அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்து 22 ரன்களுக்கு தட்டுதடுமாறி வந்தது. அந்த சமயத்தில் உள்ளே வந்த மார்கஸ் ஸ்டொய்னிஸ், இதற்கு முன்னர் என்ன நடந்தது என்பதை பற்றி சற்றும் கவலை கொள்ளாமல், முதல் பந்திலேயே பவுண்டரியுடன் ஆரம்பித்தார். இவர் 30 பந்துகளில் 65 ரன்கள் அடித்து ஆட்டத்தில் பாதையை லக்னோ அணியின் பக்கம் திருப்பி நம்பிக்கை கொடுத்தார்.

மீதி பாதியை அடுத்து உள்ளே வந்த நிக்கோலஸ் பூரன் செய்தார். இவர் 15 பந்துகளில் அரைசதம் அடித்து ஆர்சிபி அணிக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தினார். 19 பந்துகளில் 62 ரன்கள் அடித்தபோது இவரது விக்கெட்டை தூக்கியதால் மீண்டும் ஆர்சிபி அணி ஆட்டத்திற்குள் வந்தது. அதன் பிறகு தட்டுத்தடுமாறி போட்டியின் கடைசி பந்தில் ஒரு ரன் அடித்து லக்னோ அணி வெற்றி பெற்றது.

போட்டி முடிந்த பிறகு இது குறித்து பேட்டியளித்த கேஎல் ராகுல் கூறுகையில், “இந்த மேட்ச் முடிந்தது என்னால் நம்பவே முடியவில்லை. சின்னசாமி மைதானத்தில் எப்போதும் இப்படித்தான். போட்டியின் கடைசி பந்தில் ஏகப்பட்ட போட்டிகள் இங்கே முடிந்திருக்கின்றன. நிக்கோலஸ் பூரன் மற்றும் ஸ்டோய்னிஷ் இருவரும் மிடில் ஓவர்களில் அடித்துக் கொடுத்த விதம் தான் எங்களுக்கு இத்தகைய வெற்றியை பெற்றுத்தந்திருக்கிறது.

டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை எடுத்து எங்களுக்கு மிகப்பெரிய அழுத்தத்தை கொடுத்தனர். நான் என்னுடைய பேட்டிங்கில் ஸ்ட்ரைக் ரேட் மற்றும் ரன்கள் அடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். சற்று நேரம் சரியில்லாதது போல இருக்கிறது. இந்த போட்டியை வென்று இரண்டு புள்ளிகள் பெற்றதற்கு கீழ் வரிசையில் களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் தான் காரணம். ஒரு கட்டத்தில் எளிதாக வென்று விடலாம் என்று நினைத்தேன். அதன் பிறகு மீண்டும் ஆர்சிபி பவுலர்கள் கொடுத்த அழுத்தத்தால் ஆட்டம் கடைசி வரை சென்று விட்டது. வெற்றியில் முடிந்தது மகிழ்ச்சி.” என்றார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News