ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. அசாம் மாநிலம் கௌஹாத்தியில் உள்ள பர்சாபரா மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பஞ்சாப் அணிக்கு ஷிகர் தவான், பிரப்சிம்ரன் சிங் இணை தொடக்கம் கொடுத்தது. இருவரும் இணைந்து ராஜஸ்தான் அணியின் பந்துகளை நாலாப்புறமும் சிதறடிக்க 9 ஓவர் வரை எந்த விக்கெட்டும் இல்லாமல் 86 ரன்கள் சேர்க்கப்பட்டது.

Advertisement

34 பந்துகளில் 60 ரன்களைச் சேர்த்து ராஜஸ்தானுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த பிரப்சிம்ரன் சிங்கை ஜேசன் ஹோல்டர் அவுட்டாக்கினார். ராஜஸ்தானுக்கு இது முக்கியமான விக்கெட். அடுத்து வந்த பானுகா ராஜபக்சா காயம் காரணமாக வந்த வேகத்தில் வெளியேறினார். ஒருபுறம் ஷிகர் தவான் நிலைத்து நின்று பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபுறம் ஜிதேஷ் ஷர்மா 27 ரன்களுடனும், ஷிக்கந்தர் ராஜா 1 ரன்னிலும் நடையைக்கட்டினர். 

Advertisement

இதனால் 18 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களைச் சேர்த்தது. 56 பந்துகளில் 86 ரன் என்ற ஷிகர் தவானின் அதிரடி ஆட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்களை குவித்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட்டுகளையும், சாஹல், அஸ்வின் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் யஷஸ்வி ஜெய்ஷ்வாலும் ரவிச்சந்திரன் அஸ்வின் தொடக்க வீரராக களமிறங்கினார். இதில் ஜெய்ஷ்வால் 11 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ரவிச்சந்திரன் அஸ்வின் ரன்கள் ஏதுமின்றி அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

பின்னர் ஜோடி சேர்ந்த ஜோஸ் பட்லர் - சஞ்சு சாம்சன் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் பட்லர் 19 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த சஞ்சு சாம்சன் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 42 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

அதன்பின் காளமிறங்கிய ரியான் பராக் தனது பங்கிற்கு இரண்டு சிக்சர்களை பறக்கவிட்டு 20 ரன்களைச் சேர்த்த நிலையில் எல்லிஸ் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தேவ்தத் படிக்கல் 21 ரன்களைச் சேர்த்த நிலையில் நாதன் எல்லிஸிடமே விக்கெட்டை இழந்தார். 

Advertisement

இதையடுத்து ஜோடி சேர்ந்த ஷிம்ரான் ஹெட்மையர் மற்றும் இம்பேக்ட் பிளேயராக களமிறங்கிய துருவ் ஜூரல் இணை பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். அதிலும் கடைசி 2 ஓவர்களில் ராஜஸ்தான் வெற்றிக்கு 34 ரன்கள் தேவைப்பட்ட நிலையி, துருவ் ஜூரல் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சரை விளாசி அந்த ஓவரில் 18 ரன்களைச் சேர்த்தார். 

இதையடுத்து கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை என்ற நிலையில் பஞ்சாப் தரப்பில் சாம் கரண் கடைசி ஓவரை வீசினார். இதில் 36 ரன்களைச் சேர்த்திருந்த ஹெட்மையர் தேவையில்லாமல் ரன் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். அதன்பின் வந்த ஜேசன் ஹோல்டராலும் போதிய ரன்களைச் சேர்க்க முடியவில்லை. 

இதனால் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்களை மட்டுமே சேர்த்தது. பஞ்சாப் தரப்பில் நாதன் எல்லிஸ் 4 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News