ஜெய்ஷ்வால், ரிங்கு சிங்கின் எதிர்காலம் குறித்து ரவி சாஸ்திரி கருத்து! 

Updated: Thu, May 18 2023 19:55 IST
IPL 2023: Ravi Shastri Selects Yashasvi Jaiswal, Rinku Singh As His Standout Players From The Tourna (Image Source: Google)

16ஆவது சீசன் ஐபிஎல் தொடர் பல்வேறு திருப்புமுனைகளை கொண்டதாக அமைந்ததோடு, மற்ற ஐபிஎல் தொடர்களை போல அல்லாமல் கடைசி வாரம் வரை நெருக்கமாக சென்று கொண்டிருக்கிறது. இதுவரை குஜராத் அணி மட்டுமே பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது. மற்ற 3 இடங்களுக்கும் எந்த அணி தகுதி பெறும் என்பதில் இன்றளவும் குழப்பம் நிலவி வருகிறது.

இந்த ஐபிஎல் தொடர் பல இளம் வீரர்களுக்கும் அவர்களது எதிர்காலத்தின் திருப்புமுனையாக அமைந்திருக்கிறது. அதில் குறிப்பிடத்தக்க விதமாக இருக்கும் இரண்டு வீரர்கள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக தொடக்க வீரராக இறங்கி கலக்கிவரும் ஜெய்ஸ்வால் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பினிஷிங் செய்து வரும் ரிங்கு சிங் ஆகிய இருவரும் ஆகும்.

ஜெய்ஸ்வால், இதுவரை 4 அரைசதங்கள் மற்றும் ஒரு சதம் உட்பட 13 போட்டிகளில் 575 ரன்கள் குவித்து 47.30 சராசரியாக வைத்திருக்கிறார். அத்துடன் 166 ஸ்ட்ரைக் ரேட் வைத்து அதிரடியாகவும் விளையாடியிருக்கிறார். தடுமாறி வந்த கொல்கத்தா அணிக்கு மிகமுக்கியமான போட்டிகளில் ரிங்கு சிங் பினிஷிங் செய்து கொடுத்திருக்கிறார். இவர் 13 போட்டிகளில் 407 ரன்கள் குவித்து நான்கு அரைசதங்களும் அடித்திருக்கிறார். அனைத்து அரைசதங்களும் மிக முக்கியமான கட்டத்தில் வந்தவை.

இவர்கள் இருவரும் எதிர்காலத்தின் துவக்க வீரர் மற்றும் பினிஷர் ஆக இருப்பார்கள் என்று கருத்துக்கள் நிலவி வருகின்றன. இந்நிலையில் இவர்களை பாராட்டி இருவரின் எதிர்காலம் இந்திய அணையில் எப்படி இருக்கும்? என்பது பற்றியும் பேசியுள்ளார் ரவி சாஸ்திரி.

இதுகுறித்து பேசிய அவர், “கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் இந்த வருடம் ஜெய்ஸ்வால் மிகச் சிறப்பாக பயிற்சி செய்த பிறகு சீசனுக்கு வந்திருக்கிறார் என்று தெரிகிறது. பல்வேறு இடங்களில் அடிக்கக்கூடிய அளவிற்கு சாட்களை வளர்த்துக் கொண்டிருக்கிறார். மேலும் அவருடைய ஆற்றலும் வளர்ந்து இருக்கிறது நன்றாக சிக்ஸர்களை அடிக்கிறார். இது மிகச்சிறந்த விஷயம். அவரது எதிர்காலத்திற்கும் இது மிகச் சிறந்த விஷயம். கடந்த சீசனில் சில இடங்களில் ஷாட்களை அடிப்பதற்கு திணறி வந்தார். 

இம்முறை நன்றாக ஒர்க் அவுட் செய்து வந்து மைதானத்தின் பல பக்கங்களிலும் அடுத்து வருகிறார். இந்திய அணிக்கும் விரைவாக எடுக்கப்படுவார் என்று நம்புகிறேன். இன்னொரு வீரரை நான் குறிப்பிட்டாக வேண்டும். ரிங்கு சிங் இந்த வருடம் பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். அதற்கு மிக முக்கிய காரணம் அவரிடம் இருக்கும் உறுதியான மனநிலை மற்றும் அழுத்தமான சூழ்நிலைகளை சிறப்பாக கையாண்டு விளையாடுவது தான். போட்டியை ஃபினிஷ் செய்வது எளிதல்ல. அதையும் சிறப்பாக செய்கிறார். ஒவ்வொரு வருடமும் அவரை பார்க்கும் பொழுது தன்னை தானே நிறைய வளர்த்துக் கொண்டிருக்கிறார்.

இவர்கள் இருவரும் கடினமான குடும்ப சூழலில் இருந்து வந்தவர்கள். மிகவும் இளம் வயதிலேயே நிறைய கஷ்டங்களை கண்டவர்கள். இருவரின் ஆட்டத்திலும் இவர்கள் பட்ட கஷ்டம் நன்றாகவே தெரிகிறது மற்றும் அதன் பிரதிபலன் இப்போது கிடைப்பது மகிழ்ச்சியை கொடுக்கிறது. இவர்கள் இருவருக்கும் எதுவும் எளிதாக கிடைக்கவில்லை. கிரிக்கெட் மீது இருந்த பேரார்வம், திடமான மனநிலை மற்றும் சாதிக்க வேண்டும் என்கிற பசி ஆகியவை தான் இந்த இடத்திற்கு இவர்களை கொண்டு வந்திருக்கிறது” என்று புகழ்ந்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை