லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணிக்கு கேப்டன் கேஎல் ராகுல் 74 ரன்கள் அடித்துக் கொடுத்தார். நல்ல துவக்கம் கொடுத்த கைல் மேயர்ஸ் 29 ரன்கள் அடித்திருந்தார். மற்ற வீரர்கள் பெரிதளவில் சோபிக்கவில்லை. ஆகையால் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் அடித்திருந்தது லக்னோ அணி. பந்து வீச்சில் ஷாம் கர்ரன் அசத்தினார். இந்த போட்டியில் ஷிகர் தவான் இல்லாததால் ஷாம் கர்ரன் தற்காலிக கேப்டன் பொறுப்பேற்று விளையாடினார்.

Advertisement

இதையடுத்து, 160 ரன்கள் இலக்கை துரத்திய பஞ்சாப் அணிக்கு சிறப்பான துவக்கம் கிடைக்கவில்லை. பின்னர் வந்த மேத்தியு ஷாட் 34 ரன்கள் அடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த சிக்கந்தர் ராசா மிடில் ஆர்டரில் அபாரமாக விளையாடி கிட்டத்தட்ட கடைசி வரை ஆட்டத்தை எடுத்துச் சென்றார் இவர் 41 பந்துகளில் 57 ரன்கள் அடித்து கிவுட் ஆனார். அணிக்காக கடைசியில் வந்து பினிஷிங் ரோல் விளையாடிய சாருக் கான் 10 பந்துகளில் இரண்டு சிக்சர் ஒரு பவுண்டரி உட்பட 23 ரன்கள் அடித்து வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றியதோடு கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்றார். பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

Advertisement

போட்டி முடிந்த பிறகு வெற்றி பெற்ற அணியின் கேப்டன் சாம் கரன் பேசுகையில், “எங்களுடைய ஸ்பின்னர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசினார்கள். ரபாடா வழக்கம்போல தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நல்ல துவக்கம் இல்லாதபோது, மிடில் ஆர்டரில் சிக்கந்தர் ராசா விளையாடியது தான் திருப்புமுனையாக அமைந்தது.

ஷாருக் கான் பினிஷிங் செய்த விதம் மிகச் சிறப்பாக இருந்தது. அதற்காகத்தான் அவர் அணியில் இருக்கிறார். அவரது ரோலில் தெளிவாகவும் இருக்கிறார். உள்ளே வந்த முதல் பந்திலேயே சிக்ஸர் அடிக்கும் வீரர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். அனைவராலும் இதை செய்துவிட முடியாது. குறிப்பாக இது போன்று வெவ்வேறு கோணங்களாக இருக்கும் மைதானத்தில் அது அவ்வளவு எளிதல்ல.

அணியில் ஒவ்வொரு இடத்திற்கும் பல விதமான வீரர்கள் இருப்பதால் எங்களுக்கு எந்த வகையிலும் பிரச்சனை இல்லை. நான் இதற்கு முன்னர் கேப்டன் பொறுப்பு வகித்ததில்லை. முற்றிலும் மாறுபட்ட உணர்வாக இருக்கிறது. ஷிக்கர் தவான் விரைவில் குணமடைந்து விடுவார் அணிக்கு திரும்புவார் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News