கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரஸல் இந்த சீசனில் எதிர்பார்த்த அளவிற்கு பேட்டிங்கில் செயல்படவில்லை. கடந்த சீசனும் அவருக்கு இந்த பிரச்சனை இருந்தது. இந்த சீசன் கூடுதலாக அடிக்கடி காயம் அடைந்து விடுகிறார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் போது முதல் ஓவரை வீசிய பிறகு காலில் காயம் ஏற்பட்டு வெளியேறினார். பின்னர் சரிசெய்துகொண்டு வந்து இரண்டாவது ஓவர் வீசிவிட்டு மீண்டும் காலில் பிரச்சினை ஏற்பட்டு வெளியேறினார்.

Advertisement

இவ்வாறாக இரண்டு மூன்று முறை அவருக்கு நடந்தது. பேட்டிங்கிலும் இதன் காரணமாக ரஸல் சரியாக செயல்படவில்லை. 6 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே அடித்து முக்கியமான கட்டத்தில் மயங்க் மார்க்கண்டே பந்தில் அவுட் ஆனார். இந்நிலையில் ரசல் உடல்நிலை குறித்து 2018ஆம் ஆண்டே அவரிடம் அறிவுரை கூறியதாகவும், அவரது பேட்டிங் வரிசையை மாற்றி இறங்கினால் இன்னும் அதிக ரன்கள் அடிக்கலாம் என்றும் ரஸலிடம் பேசியதை சேவாக் பகிர்ந்து கொண்டார். 

Advertisement

இதுகுறித்து பேசிய அவர், “நான் 2018ஆம் ஆண்டு ரஸல் உடல்நிலையில் சற்று பிரச்சினைகள் இருப்பதை கண்டு அவரிடம் சில அறிவுரைகளை கூறினேன். மிடில் ஆர்டரில் களமிறங்கும்போது ரன்கள் ஓட வேண்டும். அப்போது உடல்நிலை ஒத்துழைக்காது. ஆகையால் ஓப்பனிங் இறங்கினால் அடிக்கடி ரன்கள் ஓட வேண்டிய அவசியம் இருக்காது. அவருக்கு இருக்கும் பலத்திற்கு நிறைய பவுண்டரிகளுக்கு பதில் சிக்ஸர் அடிக்கலாம். நிறைய இடங்கள் கிடைக்கும் என்று அறிவுறுத்தினேன்.

கரீபியன் பிரிமியர் லீகில் ஓபனிங் இறங்கி சதம் அடித்தார் ரஸல். அங்கு ரஸல் தான் கேப்டன். ஆகையால் தைரியமாக அந்த முடிவை எடுக்க முடிந்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் வேறொருவர் கேப்டன். அணியின் திட்டமும் வேறு மாதிரியாக இருக்கும். ஆனால் அணி நிர்வாகம் முடிவு செய்து ரசலை ஒப்பனிங் இறக்கினால் கூடுதல் ரன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. கடந்த காலங்களில் சுனில் நரேன் ஓபனிங் இறங்கி நிறைய ரன்களை அடித்தும் கொடுத்திருக்கிறார். அதுபோல ரஸல் வைத்து ரிஸ்க் எடுக்கலாம்.” என்று தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News