இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடிபெற்ற 55ஆவது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. டெல்லியில் உள்ள அருன் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் - அபிஷேக் போரல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் வழக்கம்போல் அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்ஸர்களையும் விளாசிய ஃபிரேசர் மெக்குர்க் 19 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 50 ரன்களை எடுத்திருந்த நிலையில் மெக்குர்க் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஷாய் ஹோப் ஒரு ரன்னிலும், அக்ஸர் படேல் 15 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

Advertisement

அதேசமயம் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் போரல் 28 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அவருக்கு துணையாக ரிஷப் பந்தும் ஒருசில பவுண்டரிகளை அடிக்க அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. பின் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 65 ரன்களைச் சேர்த்த நிலையில் அபிஷேக் போரல் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 15 ரன்களை மட்டுமே எடுத்திருந்த ரிஷப் பந்தும் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் அறிமுக வீரர் குல்பதீன் நைப் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 19 ரன்கள் எடுத்திருந்த குல்பதீன் நைப் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ரஷிக் சலாமும் அடுத்தடுத்த பந்துகளில் பவுண்டரியை விளாசினார். அதேசமயம் மறுமுனையில் சிக்ஸர்களை பறக்கவிட்ட டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 41 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்களைச் சேர்த்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News