ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 7ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களைக் குவித்தது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ஷிவம் தூபே 2 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 51 ரன்களைச் சேர்த்தார். 

Advertisement

அதேபோல் அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரச்சின் ரவீந்திரா தலா 46 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். மேலும் தனது முதல் ஐபிஎல் போட்டியில் விளையாடிய சமீர் ரிஸ்வி இரண்டு சிக்சர்களை விளாசி 14 ரன்களைச் சேர்த்தனர். குஜராத் அணி தரப்பில் ரஷித் கான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

Advertisement

இதையடுத்து கடின இலக்கை துரத்திவரும் குஜராத் டைட்டன்ஸ் அணியில் கேப்டன் ஷுப்மன் கில் 8 ரன்களோடு நடையைக் கட்ட, அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான விருத்திமான் சஹாவும் 21 ரன்களில் தீபக் சஹார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த தமிழக வீரர்கள் சாய் சுதர்ஷன் மற்றும் விஜய் சங்கர் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்த முயற்சித்தனர். 

 

இப்போட்டியில் நிதானமாக விளையாடி வந்த விஜய் சங்கர் 12 ரன்கள் எடுத்த நிலையில் டேரில் மிட்செல் பந்துவீச்சில் மகேந்திர சிங் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன்படி ஆட்டத்தின் எட்டாவது ஓவரை டேரில் மிட்செல் வீச, அந்த ஓவரின் மூன்றாவது பந்தை எதிர்கொண்ட விஜய் சங்கர் பந்தை தடுக்க முயற்சிக்க அது பேட்டில் பட்டு விக்கெட் கீப்பர் பக்கம் சென்றது. அதனை சூதாரித்த மகேந்திர சிங் தோனி லாவகமாக டைவ் அடித்து அந்த கேட்சைப் பிடித்து அசத்தினார். 

இதனால் விஜய் சங்கர் ஏமாற்றத்துடன் பெவிலியனுக்கு திரும்பினார். அதேசமயம் தற்போது 42 வயதை எட்டியுள்ள மகேந்திர சிங் தோனி விக்கெட் கீப்பிங்கில் மீண்டும் ஒருமுறை தான் ஒரு ஜாம்பவான் என்பதை நிரூபித்துள்ளார். இந்நிலையில் மகேந்திர சிங் தோனி டைவ் அடித்து கேட்ச் பிடித்த காணொளியானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News