ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் மார்ச் 22ஆம் தேதி நடைபெறவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும், எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன.

Advertisement

அந்தவகையில் நடப்பு சீசனின் முதல் போட்டியில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகள் எந்தெந்த துறைகளில் வலிமையாக உள்ளன என்ற கணிப்புகளை முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர். 

Advertisement

அதன்படி, நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளின் சுழற்பந்து வீச்சு தாக்குதல்கள் மற்ற அணிகளுடன் ஒப்பிடும்போது வலுவாக இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் பியூஷ் சாவ்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சுத் துறை மிகவும் சிறப்பாகத் தெரிகிறது.

ஏனெனில் அவர்களிடம் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, நூர் அகமது போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். அதேசமயம் கேகேஆர் அணியைப் பற்றி பேசினால் சுனில் நரைன் மற்றும் வருண் சக்ரவர்த்தி என இரு அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்களைக் கொண்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியைப் பொறுத்தவரையில் அல்லா கசான்ஃபர் தொடரில் இருந்து விலகியுள்ளது அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தலாம். 

ஆனால் மிட்செல் சாண்ட்னர் இருக்கும் ஃபார்மையும், கசான்ஃபருக்கு பதிலாக முஜீப் உர் ரஹ்மான் வரும் ஃபார்மையும் பார்க்கும்போது, ​​இந்த மூன்று அணிகளில் சுழற்பந்துவீச்சு துறைதான் வலுவாக இருப்பது போல் தெரிகிறது. அதேசமயம் இந்த ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் சுழற்பந்து வீச்சு துறை பலவீனமாக உள்ளது. ஏனனில் அவர்களிடம் சுயாஷ் சர்மா, குர்னால் பாண்டியா போன்ற வீரர்கள் மட்டுமே உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

முன்னாள் இந்திய வீரரான பியூஷ் சாவ்லா தான். அவர் ஐபிஎல் தொடரில் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் மும்பை இந்தியன்ஸ் போன்ற அணிகளுக்காக விளையாடி 192 போட்டிகளில் 192 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார். இருப்பினும் நடப்பு ஐபிஎல் தொடரில் அவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News