ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 45ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தின.

Advertisement

மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இன்றைய போட்டிக்கான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் அதிவேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் மும்பை இந்தியன்ஸ் அணியில் மிட்செல் சான்ட்னர் மற்றும் விக்னேஷ் புதூர் ஆகியோருக்கு பதிலாக கரண் சர்மா மற்றும் கார்பின் போஷ் ஆகியோர் லெவனில் சேர்க்கப்பட்டிருந்தனர். 

Advertisement

இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா மற்றும் ரியான் ரிக்கெல்டன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் அடுத்தடுத்து சிக்ஸர்களுடன் இன்னிங்ஸைத் தொடங்கிய ரோஹித் சர்மா 12 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வில் ஜேக்ஸும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ரியான் ரிக்கெல்டன் 25 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்து அசத்தியதன் காரணமாக, இருவரும் பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களைக் கடந்தது. 

அதன்பின் 6 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 58 ரன்களை எடுத்திருந்த நிலையில் ரிக்கெல்டன் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 29 ரன்களைச் சேர்த்த கையோடு வில் ஜேக்ஸும் விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய திலக் வர்மா 6 ரன்களுக்கும், கேப்டன் ஹர்திக் பாண்டியா 5 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த சூர்யகுமார் யாதவ் தனது அரைசதத்தை பதிவுசெய்த கையோடு 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 54 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.

Also Read: LIVE Cricket Score

இறுதியில் நமன் தீர் மற்றும் கார்பின் போஷ் இணையும் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் கார்பின் போஷ் 20 ரன்களில் ஆட்டமிழக்க, இறுதிவரை களத்தில் இருந்த நமன் தீர் 25 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 215 ரன்களைச் சேர்த்தது. லக்னோ அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மயங்க் யாதவ் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் தலா விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News