ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபற்ற 41ஆவது லீக் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தின. 

Advertisement

ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையாடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணிக்கு டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டிராவிஸ் ஹெட் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய இஷான் கிஷானும் ஒரு ரன்னில் நடையைக் கட்டினார். மேற்கொண்டு மற்றொரு தொடக்க வீரரான அபிஷேக் சர்மா 8 ரன்னிலும், நிதீஷ் குமார் ரெட்டி 2 ரன்னிலும், அனிகெத் வர்மா 12 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

Advertisement

இதன் காரணமாக சன்ரைசர்ஸ் அணி 35 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த ஹென்ரிச் கிளாசென் - இம்பேக்ட் வீரர் அபினவ் மனோகர் இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் சீரான வேகத்தில் உயர்த்தினர். இப்போட்டியில் சன்ரைசர்ஸ் அணி 100 ரன்களை எட்டுமா என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், ஹென்ரிச் கிளாசென் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 33 பந்துகளில் தனது அரைசதத்தையும் பூர்த்தி செய்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தார். 

மேற்கொண்டு இருவரும் இணைந்து 99 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் அதிரடியாக விளையாடி வந்த ஹென்ரிச் கிளாசென் 9 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 71 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 43 ரன்களைச் சேர்த்திருந்த அபினவ் மனோகரும் ஆட்டமிழந்தார். இதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களை மட்டுமே எடுத்தது. மும்பை இந்தியன்ஸ் தரப்பில் டிரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளையும், தீபக் சஹார் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரியான் ரிக்கெல்டன் - ரோஹித் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ரியான் ரிக்கெல்டன் 11 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து ரோஹித் சர்மாவுடன் இணைந்த வில் ஜேக்ஸும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். மறுபக்கம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசிய நிலையில், இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களைக் கடந்தது.

அதன்பின் 22 ரன்களைச் சேர்த்த கையோடு வில் ஜேக்ஸ் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் ரோஹித் சர்மா அரைசதம் கடந்தார். மேற்கொண்டு அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவும் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.  பின்னர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா 8 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 70 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். ஆனாலும் மறுபக்கம் அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். 

Advertisement

Also Read: LIVE Cricket Score

இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சூர்யகுமார் யதவ் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் என 40 ரன்களைக் குவித்தர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியானது 15.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் 5ஆவது வெற்றியைப் பதிவுசெய்ததுடன் புள்ளிப்பட்டியலிலும் மூன்றாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News