இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் தொடரானது வெற்றிகரமாக 17 சீசன்களை கடந்து, 18ஆவது சீசனில் அடியெடுத்து வைக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலமானது கடந்த நவம்பர் மாதம் சௌதீ அரேபியாவில் உள்ள ஜித்தா நகரில் நடைபெற்றது. இதில் மொத்தம் 574 வீரர்கள் இறுதி செய்யப்பட்டு ஏலம் நடத்தப்பட்டது.

Advertisement

அந்தவகையில் நடைபெற்று முடிந்த வீரர்களுக்கான மெகா ஏலத்தில் அதிகபட்சமாக இந்திய அணியைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தை ரூ.27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயரை ரூ.26.76 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியும் ஏலத்தில் எடுத்தது. இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் எனும் சாதனைகளையும் படைத்தனர்.

Advertisement

இதுதவிர்த்து, யாரும் எதிா்பாராத வகையில் இந்திய வீரா் வெங்கடேஷ் ஐயா் ரூ.23.75 கோடிக்கு கொல்கத்தா அணியால் வாங்கப்பட்டாா். மேலும் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.9.75 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. அதேசமயம் நட்சத்திர வீரர்கள் டேவிட் வார்னர், பிரித்வி ஷா, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.  

இந்நிலையில் ஐபிஎல் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனானது எதிர்வரும் மார்ச் மாதம் 23ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் இறுதிப்போட்டி மே 25ஆம் தேதி நடைபெறும் என்றும் பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராஜிவ் சுக்லா இதனை தெரிவித்துள்ளார். 

இந்த சீசனின் தொடக்க மற்றும் இறுதிப் போட்டிகள் இரண்டும் கொல்கத்தாவில் ஈடன் கார்டனில் நடைபெறலாம் என்றும் செய்தி வெளியாகியுள்ளது. மேலும் மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டதாகவும், விரைவில் பிசிசிஐ அவற்றை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்றும் தெரிவித்த அவர், அடுத்த மாதம் தொடங்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணி ஜனவரி 18 அல்லது 19 ஆம் தேதி அறிவிக்கப்படலாம் என்று கூறியுள்ளார்.

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்கும் அணிகளை அறிவிப்பதற்கான கடைசி தேதி ஜனவரி 12 என ஐசிசி நிர்ணயித்திருந்த நிலையில், பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரை காரணம் காட்டி பிசிசிஐ கால அவகாசம் கோரியது குறிப்பிட்த்தக்கது. இந்த தொடருக்கு முன், இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News