ஐபிஎல் 2025: யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரைசதம்; ஆர்சிபிக்கு 174 டார்கெட்

Updated: Sun, Apr 13 2025 17:12 IST
Image Source: Google

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 28ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

ஜெய்ப்பூரில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 49 ரன்களைச்  சேர்த்திருந்த நிலையில், கேப்டன் சஞ்சு சாம்சன் 15 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். 

பின்னர் ஜெய்ஸ்வாலுடன் இணைந்த ரியான் பராக் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். மறுபக்கம் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்து அசத்தினார். இதில் இருவரும் சிறப்பாக விளையாடியதுடன் இரண்டாவது விக்கெட்டிற்கு 56 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். பின் அதிரடியாக விளையாடிய ரியான் பராக் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 30 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 10 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 75 ரன்களில் ஆட்டமிழந்தார். 

Also Read: Funding To Save Test Cricket

இறுதியில் துருவ் ஜூரெல் மற்றும் ஷிம்ரான் ஹெட்மையர் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் ஷிம்ரான் ஹெட்மையர் 9 ரன்களில் ஆட்டமிழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த துருவ் ஜூரெல் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 35 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களைச் சேர்த்தது. ஆர்சிபி தரப்பில் புவனேஷ்வர், குர்னால், ஹேசில்வுட், தயாள் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை