ஐபிஎல் 2021: சேவாக் சாதனையை முறியடித்தா ரிஷப் பந்த்!

Updated: Tue, Sep 28 2021 18:50 IST
IPL: Skipper Rishabh Pant becomes Delhi's leading run-scorer (Image Source: Google)

ஐபிஎல்-இன் இன்றைய லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி ஈயான் மார்கன் முதலில் டெல்லியை பேட்டிங் செய்ய அழைத்தார்.

கொல்த்தா பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சால் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரிஷப் பந்த் 36 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக்கை பந்த் முந்தியுள்ளார். டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகமும் இதனை ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை