ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைப்பு - பிசிசிஐ துணை தலைவர்!

Updated: Tue, May 04 2021 13:52 IST
IPL suspended for this season: Vice-President BCCI (Image Source: Google)

ஐபிஎல் போட்டியில் விளையாடிக்கொண்டிருக்கும் வீரர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து, மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ துணைதலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

சன்சரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் விருதிமான் சஹாவுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்த நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர் அமித் மிஸ்ராவுக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

மேலும் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் அனைத்தையும் மும்பையில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை