இந்தியா - அயர்லாந்து இடையேயான 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில், 2ஆவது போட்டி இன்று நடக்கிறது.

Advertisement

இந்த போட்டியிலும் வெற்றி பெற்று டி20 தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணியும், தொடரை சமன் செய்யும் முனைப்பில் அயர்லாந்து அணியும் களமிறங்கின.

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் காயத்தால் ஆடாததால் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், ஆவேஷ் கானுக்கு பதிலாக ஹர்ஷல் படேலும், சாஹலுக்கு பதிலாக ரவி பிஷ்னோயும் சேர்க்கப்பட்டனர்.

அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன் - இஷான் கிஷான் ஆகியோர் களமிறங்கினர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இஷான் கிஷான் 3 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் மார்க் அதிர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன் - தீபக் ஹூடா இணை பாரபட்சம் பார்க்காமல் அயர்லந்து பந்துவீச்சாளர்களை பதம் பார்த்தனர். தொடர்ந்து இருவரும் பவுண்டரியும் சிக்சருமாக விளாச அணியின் ஸ்கோரும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. 

Advertisement

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தங்களது முதல் அரைசதம் கடந்ததுடன், இரண்டாவது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் முறையில் 176 ரன்களையும்ச் சேர்த்தனர். 

தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த சஞ்சு சாம்சன் 77 ரன்கள் சேர்த்த நிலையில் மார்க் அதிர் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியன் திரும்பினார். ஆனாலும் மறுமுனையில் அபாரமாக விளையாடி வந்த தீபக் ஹூடா 55 பந்துகளில் தனது முதல் சர்வதேச சதத்தைப் பதிவுசெய்தார்.

இதன்மூலம் சுரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மா, கேஎல் ராகுல் ஆகியோரைத் தொடர்ந்து இந்திய அணி தரப்பில் டி20 கிரிக்கெட்டில் சதமடித்த நான்காவது இந்திய வீரர் எனும் பெருமையையும் தீபக் ஹூடா பெற்றார். 

Advertisement

மறுமுனையில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 15 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து 105 ரன்கள் எடுத்திருந்த தீபக் ஹூடாவும் ஆண்டி மெக்பிரைனின் அபாரமான கேட்ச்சின் மூலம் ஆட்டமிழந்தார். 

அவர்களைத் தொடர்ந்து வந்த தினேஷ் கார்த்திக், அக்சர் படேல் ஆகியோர் சந்தித்த முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்களைச் சேர்த்தது. 

அயர்லாந்து தரப்பில் மார்க் அதிர் 3 விக்கெட்டுகளையும், ஜோஷ் லிட்டில், கிரேக் யங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News