நடத்தை விதிகளை மீறியதாக ஹாரி டெக்டருக்கு அபராதம் விதித்த ஐசிசி!

Updated: Mon, Jul 29 2024 22:28 IST
Image Source: Google

அயர்லாந்து - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியானது கடந்த ஜூலை 25ஆம் தேதி பெல்ஃபெஸ்டில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறித்ததையடுத்து, முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 210 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த அயர்லாந்து அணியானது 250 ரன்கள் சேர்த்து விக்கெட்டை இழக்க, முதல் இன்னிங்ஸில் 40 ரன்கள் முன்னிலையும் பெற்றது. 

இதனைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஜிம்பாப்வே அணியானது இரண்டாவது இன்னிங்ஸில் 197 ரன்களில் ஆல் அவுட்டானதுடன், அயர்லாந்து அணிக்கு 157 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய அந்த அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய லோர்கன் டக்கர் - ஆண்டி மெக்பிரைன் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

இதன்மூலம் அயர்லாந்து அணியானது 4 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆண்டி மெக்பிரைன் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இப்போட்டியில் ஐசிசியின் நடத்தை விதிகளை மீறியதாக அயர்லாந்து அணி வீரர் ஹாரி டெக்டருக்கு ஐசிசி அபராதம் வித்துள்ளது. 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

அதன்படி இப்போட்டியின் போது ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்த ஹாரி டெக்டர், நடுவரின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து களத்திலேயே நின்றிருந்தார். அதன்பின் அவர் பெவிலியனுக்கு திரும்பினார். இந்நிலையில் ஹாரி டெக்டரின் இந்த செயல்பாடானது ஐசிசியின் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்பதால், அவருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 15 சதவீதம் அபாராதம் விதித்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை