2021 மற்றும் 2023ஆம் ஆண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதல் 2 இடம் பிடித்த இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் வரும் ஜூன் 7ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் இறுதிப் போட்டியில் மோதுகிறது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிய அணிகளின் வீரர்கள் இங்கிலாந்துக்கு சென்றுள்ளனர்.

Advertisement

அங்கு விராட் கோலி, முகமது சிராஜ், அஸ்வின், ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல் உள்ளிட்டோர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியின் 2ஆவது குழுவினர் இங்கிலாந்துக்கு சென்று சேர்ந்துள்ளனர். ஐபிஎல் இறுதிப்போட்டி நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், பலரின் கவனமும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி பக்கம் திரும்பியுள்ளது.

Advertisement

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேசுகையில், “உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸி. அணி வெற்றிபெறவே அதிக வாய்ப்புகள் உள்ளது. ஏனென்றால் ஓவல் மைதானம், ஆஸ்திரேலியா சூழலை போலவே அமைந்திருக்கும். இதனால் ஆஸி. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு நன்றாக எடுபடும். ஆனால் ஆஸி. வீரர்களின் மூளைக்குள் புஜாரா இப்போதும் பாதிப்பை உண்டு செய்கிறார்.

ஏற்கனவே புஜாராவால் ஆஸ்திரேலியா அணி சொந்த மண்ணில் பாதிப்புகளை அடைந்துள்ளது. அதனால் புஜாராவை விரைந்து வீழ்த்த வேண்டும் என்றே ஆஸி. வீரர்கள் கருதுவார்கள். அதுமட்டுமல்லாமல் இந்திய அணி வீரர்களின் காயமும் அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. ஏற்கனவே ரிஷப் பந்த் காயத்தால் ஓய்வில் இருப்பதால், கேஎல் ராகுல் சேர்க்கப்பட்டார். தற்போது அவரும் காயமடைந்துள்ளதால் பரத் அல்லது இஷான் கிஷனை தேர்வு செய்ய வேண்டிய நிலைக்கு இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது.

இந்திய அணியின் சூழலில் நான் இருந்தால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இஷான் கிஷனை தேர்வு செய்வேன். ஏனென்றால் இஷான் கிஷன் அதிரடியாக விளையாடக் கூடிய வீரர் என்பதோடு, அவர் எந்த நேரத்தில் என்ன செய்வார் என்பது யாருக்கும் தெரியாது. அதேபோல் அதிரடியாக விளையாடி  ஆட்டத்தின் போக்கை மொத்தமாக மாற்றக் கூடிய வீரராவார்” என்று தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News