இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி வாண வேடிக்கை காட்டியது. தொடக்க வீரர் ஷுப்மன் கில் அட்டகாசமான இரட்டை சதம் அடிக்க அவருக்கு மற்ற வீரர்கள் உறுதுணையாக நின்றனர். இதனால் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 349 ரன்களை குவித்தது.

Advertisement

இந்திய அணியின் அதிரடி ஆட்டங்களுக்கு மத்தியில் டாம் லேதம் செய்த விஷயம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. 40ஆவது ஓவரின் போது டேரில் மிட்செல் வீசிய பந்தை ஹர்திக் பாண்ட்யா அடிக்க தவறவிட, அதனை விக்கெட் கீப்பர் டாம் லேதம் பிடித்தார். அப்போது பந்து பட்டது ஸ்டம்பில் என அவுட் கேட்கப்பட்டது. இதனை ரிவ்யூவ் செய்து பார்த்த 3ஆவது நடுவரும் தவறான முடிவை வழங்கினார்.

Advertisement

உள்ளே சென்ற பந்து, ஸ்டம்புகளுக்கு மேலே தான் சென்றது. கீப்பர் டாம் லேதமின் கைகளுக்குள் சென்ற பிறகும் கூட ஸ்டம்புகளில் விளக்கு எறியவே இல்லை. ஆனால் லேதம் தான் கிளவுஸை ஸ்டம்புகளுக்கு மிகவும் அருகில் வைத்து தட்டிவிட்டார். இதனால் தான் விளக்கு எறிந்தது தெளிவாக தெரிந்தது. இதே செயலை சுப்மன் கில்லுடனும் முயற்சி செய்தார். ஆனால் அவர் பந்தை அடித்துவிட்டதால், லேதம் கைகளால் ஸ்டம்புகளை தட்டிவிடுவது அம்பலமானது.

இந்நிலையில் லேதமுக்கு தரமான பதிலடியை இந்திய விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் கொடுத்துள்ளார். நியூசிலாந்து இன்னிங்ஸின் போது 16ஆவது ஓவரில் குல்தீப் யாதவ் வீசிய பந்தை டெவோன் கான்வே தடுப்பாட்டம் ஆடினார். அப்போது பின்னால் இருந்த ஸ்டம்ப்களில் விளக்கு எறிய, பெயில்கள் திடீரென கீழே விழுந்தது. ஹிட் விக்கெட் ஆகிவிட்டோரோ என அனைவரும் நினைத்தனர். இதற்கேற்றார் போல இஷான் கிஷானும் அப்பீல் செய்தார்.

இதனையடுத்து 3ஆவது நடுவருக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதில், டாம் லேதம் ஸ்டம்புகளுக்கு அருகில் கூட செல்லவில்லை. இஷான் கிஷான் வேண்டுமென்றே கிளவுஸால் பெயில்களை தட்டிவிட்டு அவுட் கேட்டுள்ளார். இதனை நம்பி ஏமாந்த கள நடுவரும் 3ஆவது நடுவருக்கு பரிந்துரைத்துள்ளார். இஷானின் இந்த செயலுக்கு ஒருபுறம் விமர்சனங்கள் எழுந்து வந்தாலும், மற்றொருபுறம் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News