சென்னையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 9ஆது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து மும்பை இந்தியன்ஸ் அணி த்ரில் வெற்றிபெற்றது.

Advertisement

இப்போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை  அணி 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் சேர்த்தது. 151 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி 19.4 ஓவர்களில் 137 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 13 ரன்களில் தோல்வி அடைந்தது.

Advertisement

சன்ரைசர்ஸ் அணியில் பேர்ஸ்டோ, வார்னர் இருவரைத் தவிர வேறு எந்த வீரரும் சரியாக விளையாடவில்லை. வார்னர், பேர்ஸ்டோ இருவரும் அமைத்துக்கொடுத்த அடித்தளத்தை எந்த வீரரும் கடைசிவரை பயன்படுத்தவில்லை.

ஒரு கட்டத்தில் 71 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து வலுவாக இருந்த சன்ரைசர்ஸ் அணி அடுத்த 66 ரன்களுக்குள் மீதமிருந்த 9 விக்கெட்டுகளை இழந்து உள்ளது. அதிலும் கடைசி 8 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது ஒட்டுமொத்த பேட்டிங் தோல்வி.

போட்டி முடிவுக்கு பின் பேசிய டேவிட் வார்னர், ”இந்தத் தோல்வியை எவ்வாறு எடுத்துக் கொள்வது, என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை.எங்கள் தோல்விக்கு காரணமே ஆழமான பேட்டிங் இல்லாததுதான். கடைசிவரை நின்று ஒருவர் கூட பேட்டிங் செய்யவில்லை. ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள், ஆழமான பேட்டிங் இல்லாதவரை ஒரு போட்டியில் கூட வெல்ல முடியாது.

ஹர்திக் பாண்டியாவின் சிறந்த பீல்டிங்கில் நான் விக்கெட்டை இழந்தேன். ஆனால் கிரிக்கெட்டை பொருத்தவரை 150 ரன்கள் என்பது எளிதாக அடைந்து விடக்கூடிய இலக்குதான். சரியான பார்டனர்ஷிப் மட்டும் கிடைத்துவிட்டால், ஒரு முனையில் அவரை நிறுத்திவிட்டு,எளிதாக இலக்கை அடைந்துவிடலாம்.

Advertisement

இப்போதுள்ள நிலையில் சன்ரைசர்ஸ் வீரர்களுக்கு ஸ்மார்ட் கிரிக்கெட் அவசியம். அதிலும் நடுவரிசை வீரர்களுக்கு ஸ்மார்ட் கிரிக்கெட்டை எவ்வாறு விளையாடுவது என்பது தெரிய வேண்டும். பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசினார்கள், ஆடுகளம் மெதுவானதாக இருந்தாலும், அதற்கு ஏற்றார்போல் பந்துவீசினார்.

தவறுகளில் இருந்து பாடம் கற்க வேண்டும், அடுத்த போட்டியில் பேட்டிங் வரிசை ஆழமாக இருக்க வேண்டும். பந்துவீச்சாளர்கள் தங்களை சூழலுக்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொண்டார்கள், நாம் அடுத்த கட்டத்துக்குச் செல்ல வெற்றி அவசியம், வெற்றி இருந்தால்தான் புன்னகை வரும்.

வில்லியம்ஸன் உடல்நிலை குறித்து அணியின் உடற்தகுதி நிபுணரிடம் பேசுவேன், உடல் தகுதியுடன் இருந்தால், நிச்சயம் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்” என்று தெரிவித்தார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News