பிளே ஆஃப்பிற்கு முன்னேறாதது வருத்தமளிக்கிறது - மிட்செல் மார்ஷ்!

Updated: Sun, Jun 05 2022 22:05 IST
It was a shame Delhi Capitals couldn’t get into the IPL 2022 playoffs: Mitchell Marsh (Image Source: Google)

15ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. அந்த அணி 14 புள்ளிகள் எடுத்து 5ஆவது இடத்தை பிடித்தது.

மும்பை அணிக்கு எதிரான தனது கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லி வெற்றி பெற்றால் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறலாம் என்ற நிலை இருந்தது. ஆனால் அந்த ஆட்டத்தில் தோற்று டெல்லி வெளியேறியது.

இந்த நிலையில் டெல்லி தகுதி பெறாதது குறித்து அந்த அணியில் விளையாடிய ஆஸ்திரேலியா வீரர் மிட்செல் மார்ஷ் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “நாங்கள் ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாமல் போனது அவமான கரமானது. இது வேதனை அளித்தது. ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் எனக்கு சிறிய காயம் ஏற்பட்டது. பிறகு ஒரு போட்டியில் விளையாடினேன்.

அப்போது கரோனா பாதிப்பு ஏற்பட்டதால் சற்று நடுக்கம் ஏற்பட்டது. அதன்பின்னர் மீண்டும் போட்டிகளில் விளை யாடியது மகிழ்ச்சியாக இருந்தது. நான் 3ஆவது வரிசையில் பேட்டிங் செய்வதை விரும்புகிறேன். 

அதை டி20 கிரிக்கெட்டில் எனது சிறந்த நிலைப்பாடு என்று நான் நிச்சயமாக உணர்கிறேன். மேலும் பவர்பிளேவில் பேட்டிங் செய்வதை விரும்பினேன். என்னால் 3ஆவது வரிசை யில் தொடர்ந்து நிலைத்து நிற்க முடியும் என்று நம்புகிறேன்.

சர்வதேச கிரிக்கெட் மிகவும் கடினமானது. உலகில் எந்த அணிக்கு எதிராக எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்தர்.

நடப்பு சீசன் ஐபிஎல் தொடரின் முதல் சில போட்டிகளில் காயம் காரணமாக விளையாடாமல் இருந்த மிட்செல் மார்ஷ் பிற்பகுதியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்து 251 ரன்களைச் சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை