பட்லர் விக்கெட் எடுத்தது மிக முக்கியமானது - மார்கஸ் ஸ்டொய்னிஸ்!

Updated: Thu, Apr 20 2023 13:06 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி பவர் பிளேவில் 37 ரன்கள் எடுத்து, 10 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பில்லாமல் 79 ரன்கள் எடுத்து, 20 ஓவர்களின் முடிவில் ஏழு விக்கட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது.

இந்த இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணிக்கு முதல் விக்கட்டுக்கு 11.3 ஓவரில் 87 ரன்கள் கிடைத்தது. ஆனால் பத்து ஓவர்களுக்குப் பிறகு சரியாக விளையாடாமல் கடைசி ஐந்து ஓவர்களுக்கு 50 ரன்கள் தேவை என்று நிலைமையைக் கொண்டு வந்து, இறுதி ஓவருக்கு 19 ரன்கள் தேவை என்ற நிலையில் 8 ரன்கள் மட்டுமே அடித்து 10 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக ராஜஸ்தான் அணி தோல்வியை தழுவியது.

பேட்டிங்கில் முக்கியமான கட்டத்தில் களமிறங்கி 16 பந்துகளில் 21 ரன்கள் மற்றும் பந்துவீச்சில் ஜெய்ஷ்வால் மற்றும் பட்லர் ஆகிய இரண்டு முக்கியமான வீரர்களின் விக்கெட்டுகளை கைப்பற்றிய மார்கஸ் ஸ்டாய்னிஷ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

அப்போது பேசிய ஸ்டொய்னிஸ், “இன்று பவுலிங் மூலம் நல்ல பங்களிப்பை கொடுத்தது மகிழ்ச்சியை கொடுக்கிறது. பட்லர் விக்கெட் எடுத்தது மிக முக்கியமானது. ஆனால் அவருக்கு என்று தனியாக எந்தவித திட்டமிடலும் நான் செய்யவில்லை. அந்த நேரத்தில் சில கிரிக்கெட் யுக்திகளை பயன்படுத்தி பிட்ச் செயல்பட்ட விதத்திற்கு ஏற்றவாறு பந்துவீசினேன். அவரே மாட்டிக்கொண்டு ஆட்டம் இழந்துவிட்டார்.

இந்த பிட்ச் பேட்டிங் செய்வதற்கு சற்று கடினமாக இருக்கிறது என்று அறிந்து கொண்டோம். ஆகையால் கடைசி 20 பந்துகளில் 50 ரன்கள் இருந்தால் தான் கட்டுப்படுத்த முடியும் என்கிற அவசியமில்லை என்றும் முடிவு செய்தோம். அதற்கு ஏற்றவாறு திட்டங்களை வகுத்தோம். அடுத்தடுத்த போட்டிகளிலும் நான்கு ஓவர்களை முழுமையாக வீசுவேனா என்பதை கேப்டனிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை