இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆஆவது டெஸ்ட் போட்டி தற்போது லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 364 ரன்களையும், இங்கிலாந்து அணி 391 ரன்கள் குவித்துள்ளது. இதன் காரணமாக தற்போது இந்திய அணியை விட இங்கிலாந்து அணி 27 ரன்கள் முன்னிலை உள்ளது. 

Advertisement

மீதம் இரண்டு நாட்கள் போட்டி நடைபெற உள்ளதால் இந்த போட்டியில் வெற்றி, தோல்வி முடிவுகள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் என்று வலுவாக இருந்தது.

Advertisement

இந்நிலையில் இந்திய அணி அடுத்த 88 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து 364 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இப்படி இந்திய அணியின் சரிவுக்கு காரணமாக ஆண்டர்சன் திகழ்ந்தார். 62 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 31ஆவது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியயும், லார்ட்ஸ் மைதானத்தில் ஏழு முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திம் அசத்தியுள்ளார்.

தற்போது 39 வயதாகும் இங்கிலாந்து அணியின் முன்னணி வீரரான ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து எப்போது ஓய்வு பெறுவார் ? என்று அனைவரும் எதிர்பார்த்து வரும் வேளையில் தற்போது ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அவர் அறிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய ஆண்டர்சன்,  “லண்டன் லார்ட்ஸ் மைதானம் தான் என்னுடைய சொந்த மைதானம், இது எனக்கு கூடுதல் சிறப்பு. நான் எப்போது இங்கு பந்து வீசினாலும் என்னுடைய சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன்.

அந்த வகையில் எனக்கு இது கடைசி போட்டி கிடையாது. லண்டன் மைதானம் நான் அறிமுகமான மைதானம். அதுமட்டுமின்றி முதன்முறையாக 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியதும் இங்கு தான் தற்போது இங்கு ஏழு முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளேன். இந்த சாதனையை நினைத்தால் என்னால் நம்ப முடியவில்லை. 

Advertisement

இருந்தாலும் எனக்கு இது கடைசி முறை கிடையாது. லார்ட்ஸ் மைதான பலகையில் என் பெயர் எழுதப்படுவதும் இது கடைசி முறை கிடையாது. நான் நிச்சயம் அடுத்து இங்கு நடைபெறும் டெஸ்ட் போட்டியிலும் விளையாடுவேன்” என உறுதிபட தெரிவித்துள்ளார். 
 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News