ENG vs IND, 2nd T20I: ஜடேஜா அதிரடியால் தப்பிய இந்தியா; இங்கிலாந்துக்கு 171 டார்கெட்!

Updated: Sat, Jul 09 2022 20:50 IST
Jadeja Helps India To 170/8 In 20 Overs; Jordan & Gleeson Shine With The Ball For England (Image Source: Google)

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி சௌத்தாம்ப்டனில் நடந்தது. அந்த போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
 
இரண்டாவது டி20 போட்டி  இன்று எட்ஜ்பாஸ்டனில் நடக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணியும், இந்த போட்டியில் வென்று தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்கும் முனைப்பில் இங்கிலாந்து அணியும் களம் கண்டுள்ளன. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ரிஷப் பந்த் இணை களமிறங்கியது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பந்த் 15 பந்துகளில் 26 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து களமிறங்கிய விராட் கோஇயும் ஒரு ரன்னுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து 30 ரன்களைச் சேர்த்திருந்த கேப்டன் ரோஹித் சர்மாவும் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.

பின்னர் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் ஆகியோரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க இந்திய அணி 150 ரன்களையாவது எட்டுமா என்ற கேள்வி எழுந்தது. 

ஆனால் ரவீந்திர ஜடேஜா தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சவலான இலக்கை நோக்கி அழைத்துச் சென்றார். இதன்மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்களைச் சேர்த்தது. 

இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 46 ரன்களைச்சேர்த்தார். இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் ஜோர்டன் 4 விக்கெட்டுகளையும், ரிச்சர்ட்ன் கிலென் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை