Eng vs ind 2nd t20i
பட்லர் ஒரு டேஞ்சரஸ் பேட்ஸ்மேன் - புவனேஷ்வர் குமார்!
இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையே நேற்று எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.
இதில் பவர்பிளே ஓவர்களில் இதுவரை அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராகவும், அதிக டாட் பால்களை வீசிய வீரராகவும் இருந்து வரும் புவனேஸ்வர் குமார் இந்த போட்டியிலும் முதல் ஓவரின் முதல் பந்தில் விக்கெட்டுடன் ஆரம்பித்து மெய்டன் ஓவராக வீசினார். இந்த போட்டியின் முடிவில் மூன்று ஓவர்கள் வீசிய அவர் ஒரு மெய்டனுடன் 15 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்களை வீழ்த்தி அசத்தியிருந்தார். அதிலும் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லருடைய விக்கெட்டை அவர் வீழ்த்தியது இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது.