இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இப்போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 3-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 353 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. அதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 307 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

Advertisement

அதைத்தொடர்ந்து 46 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியானது அஸ்வின் மற்றும் குல்தீப் ஆகியோரது அபாரமான பந்துவீச்சின் மூலம் 145 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. அதன்பின் 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி நான்காம் நாள் தேநீர் இடைவேளைக்கு முன்னதாகவே இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. 

Advertisement

இந்நிலையில் இப்போட்டியில் வெற்றிபெற்றது குறித்து பேசிய ஷுப்மன் கில், “இந்த போட்டியில் இங்கிலாந்து அணி எங்கள் மீது அதிக நெருக்கடியை ஏற்படுத்தியது, ஆனால் எங்களது தொடக்க வீரர்கள் மிக சிறப்பான தொடக்கத்தை கொடுத்ததுடன், அணிக்கு தேவையாம அடித்தளத்தையும் அமைத்து கொடுத்தனர். இப்போட்டியில் மிக சிறப்பான தொடக்கம் கிடைத்தாலும், அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்ததது நெருக்கடியை ஏற்படுத்தியது.  

ஆனால் துருவ் ஜூரல் களத்திற்கு வந்த உடனே அழுத்தத்தை குறைத்ததுடன், சூழ்நிலைக்கு ஏற்ப தனது ஆட்டத்தை மாற்றிக்கொண்டார்.  ஏனெனில் அச்சயம் இங்கிலாந்து அணி எங்களுக்கு பவுண்டரிகளை கொடுக்க கூடாது என பீல்டர்களை செட் செய்திருந்தனர். இதனால் நாங்கள் பவுண்டரிகளைத் தவிர்த்து ரன்களைச் சேர்க்க தொடங்கினோ. அப்போது நான் துருவ் ஜூரலிடம், முதல் இன்னிங்ஸில் நீ நன்றாக விளையாடினாய், அதே போன்றே அதே மனநிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸிலும் விளையாடுமாறு கூறினேன்.

முதல் இன்னிங்ஸை விட இரண்டாவது இன்னிங்ஸில் ஆடுகளம் சுழற்பந்துவீச்சிற்கு சாதகமாக இருந்தது.  அதனால் எல்பிடபிள்யூ ஆவதில் இருந்து தப்பித்து கொள்ள வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தினேன். இங்கிலாந்து போன்ற வலுவான அணியை இளம் வீரர்களை வைத்து எதிர்கொள்வது சாதரண விஷயம் கிடையாது. ஏனெனில் முதல் போட்டிக்கு பிறகு எங்கள் அணியில் கேஎல் ராகுலும் விளையாடவில்லை, ஆனால் ரோஹித் சர்மா எங்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து, எங்களுக்கு முழு ஆதரவாக இருந்தார்” என்று தெரிவித்தார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News