இந்தியாவின் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 4ஆவது காலிறுதிச்சுற்று ஆட்டத்தில் கர்நாடகா மற்றும் பரோடா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பரோடா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து கார்நாடகா அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய கர்நாடகா அணியில் கேப்டன் மயங்க் அகர்வால் 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த லியாம் லிவிங்ஸ்டோன் - அனீஷ் கேவி இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதம் கடந்த கையோடு அனீஷ் கேவி 52 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய தேவ்தத் படிக்கல் சதமடித்து அசத்திய நிலையில், 15 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 102 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.

Advertisement

அதன்பின் களமிறங்கிய வீரர்களில் ஸ்மாறன் ரவிச்சந்திரன் மற்றும் கிருஷ்ணன் ஸ்ரீஜித் ஆகியோர் தலா 28 ரன்களையும், அபினவ் மனோஹர் 21 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் கர்நாடகா அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 281 ரன்களைச் சேர்த்தது. பரோடா அணி தரப்பில் ராஜ் லிம்பானி மற்றும் அதித் செத் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய பரோடா அணியில் அஷ்வின் குமார் 14 ரன்களில் விக்கெட்டி இழந்து ஏமாற்றமளித்தார். 

பின்னர் ஜோடி சேர்ந்த சஷ்வத் ராவத் மற்றும் அடிட் செத் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 99 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் அடிட் செத் 56 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் குர்னால் பாண்டியாவும் 30 ரன்களையும், விஷ்னு சோலங்கி ஒரு ரன்னிலும், ஷிவாலிக் சர்மா 5 ரன்னிலும், பானு புனியா 22 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஷ்வத் ராவது சதமடித்து அணிக்கு நம்பிக்கையளித்தார். பின் 104 ரன்களை எடுத்திருந்த நிலையில் ராவத்துட்ம் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் பரோடா அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 276 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் கர்நாடகா அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் பரோடா அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன் அரையிறுதிச்சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News