Asia Cup 2025: ஹாங்காங் ஆடவர் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இலங்கையின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் கௌஷல் சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

ஆசிய கிரிக்கெட் சங்கத்தில் சார்பில் ஒவ்வொரு இரண்டு ஆண்டுக்கும் ஒருமுறை ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது நடத்தப்பட்டு வருகிறது. இதில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், நேபாள், ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் விளையாடுவது வழக்கம். மேலும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை நடைபெறும் போது இத்தொடரானது ஒருநாள் வடிலும், டி20 உலகக்கோப்பை தொடரின் போது டி20 வடிவிலும் நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement

அந்தவகையில் நடப்பு ஆசிய கோப்பை தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் எதிர்வரும் செப்டம்பர் 09ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடரின் இறுதிப்போட்டியனது செப்டம்பர் 29ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், நேபாள் ஆகிய அணிகளும், குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளும் இடம்பிடித்துள்ளன.

மேற்கொண்டு தொடரின் முதல் லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்திய அணி தங்களுடன் முதல் லீக் போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிராக விளையாடவுள்ளது. அதன்பின் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியானது செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக ஹாங்காங் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் இலங்கை வீர்ர் கௌஷல் சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணிக்காக கடந்த 2011ஆம் ஆண்டு அறிமுகமான இவர், 2018ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இதற்கிடைப்பட்ட காலத்தில் அவர் 39 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3 சதங்கள், 12 அரைசதங்களுடன் 2099 ரன்களைச் சேர்த்துள்ளார். 

Also Read: LIVE Cricket Score

இதுதவிர்த்து முதல் தர கிரிக்கெட்டில் 209 போட்டிகளில் விளையாடியுள்ள சில்வா, அதில் 41 சதங்கள் மற்றும் 54 அரைசதங்களுடன் 13,932 ரன்களைக் குவித்துள்ளார். மேலும் அவர் தனது ஓய்வுக்கு  பிறகு இலங்கை, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளின் பயிற்சியாளர் குழுவிலும் இடம்பிடித்துள்ளார். இந்நிலையில் அவர் ஹாங்காங் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளது அந்த அணிக்கு பெரும் பலமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News