சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முழு உறுப்பினராக உள்ள ஆடவர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான சர்வதேச டி20 போட்டியில் முதல் பெண் கள நடுவராக செயல்பட்டுள்ளார் கிம் காட்டன். இன்று நடைபெற்ற இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியில்தான் கள நடுவராக அவர் செயல்பட்டுள்ளார்.

Advertisement

தற்போது 48 வயதான அவர் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் 54 மகளிர் டி20 மற்றும் 24 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் நடுவராக பணியாற்றி உள்ளார். நியூஸிலாந்து நாட்டை சேர்ந்த இவர், கடந்த 2020ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான ஹாமில்டன் போட்டியில் மூன்றாம் நடுவராக செயல்பட்டிருந்தார். 

Advertisement

இந்நிலையில், இன்று நடைபெற்ற நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் களநடுவராக செயல்பட்டு அசத்தினார். இதன்மூலம் சர்வதேச ஆடவர் கிரிக்கெட் போட்டியில் கள நடுவராக செயல்பட்ட முதல் பெண் நடுவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். 

முன்னதாக இவர், 2018 முதல் மூன்று மகளிர் டி20 உலகக் கோப்பை மற்றும் ஒரு ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் நடுவராக செயல்பட்டுள்ளார். இதில் 2020, 2022 மற்றும் 2023 இறுதிப் போட்டிகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News