ஜாகீர் கானை ஆலோசகராக நியமித்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!

Updated: Wed, Aug 28 2024 21:21 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொடருக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் கலைக்கப்பட்டு வீரர்களுக்கான மெகா ஏலமும் இந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதனால் இந்த ஏலத்தில் எந்தெந்த வீரர்களை ஐபிஎல் அணிகள் தக்கவைக்கும் மற்றும் எந்தெந்த வீரர்களை தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. 

இதன் ஒருபகுதியாக அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கு தற்போதில் இருந்தே ஐபிஎல் அணிகள் பணிகளை மேற்கொண்டு பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றனர்.  அதிலும் குறிப்பாக அணியின் பயிற்சியாளர்களை மற்றுதல், புதிய பயிற்சியாளர்களை நியமித்தல், வீரர்களை ஒப்பந்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளில் ஐபிஎல் அணிகள் மும்முரமாக இறங்கியுள்ளனர்.  அதன் ஒருபகுதியாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் தங்கள் பணிகளை செய்துவருகிறது. 

அதன்படி, எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கானை அணியின் அலோசகராக நியமிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளதை அந்த அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

அந்தவகையில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கொயங்கா ஜாகீர் கானின் பதவியை உறுதிசெய்யும் வகையில், அவருக்கு லக்னோ அணியின் ஜெர்சியை வழங்கி கௌரவித்துள்ளார்.  மேற்கொண்டு அந்த அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டு வந்த மோர்னே மொர்க்கல் தற்சமயம், இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

இதன் காரணமாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளர் குறித்த அறிவிப்பையும் விரையில் வெளிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸின் தற்போதைய பயிற்சியாளர்கள் இடத்தில் தலைமை பயிற்சியாளராக ஜஸ்டின் லங்கரும், துணை பயிற்சியாளர்களாக ஆடம் வோஜஸ், லான்ஸ் க்ளூஸ்னர், ஜான்டி ரோட்ஸ், ஸ்ரீதரன் ஸ்ரீராம் மற்றும் பிரவின் டாம்பே ஆகியோருடன் தற்போது ஜாகீர் கானும் இணைந்துள்ளது அணிக்கு பெரும் பலத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை