இந்திய அணி வெற்றியை இங்கிலாந்தில் கண்டு ரசித்த கோலி & கோ!

Updated: Wed, Jul 21 2021 12:25 IST
Image Source: Google

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 4ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், கவுண்டி லெவன் அணியுடன் இந்திய அணி 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

இதற்கிடையில் ஷிகர் தவான் தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று கொழும்புவில் நடைபெற்றது.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் தீபக் சஹாரின் அபாரமான ஆட்டத்தால் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இந்நிலையில், இங்கிலாந்தில் பயிற்சி போட்டியில் விளையாடிவரும் இந்திய அணி வீரர்கள், தங்களுக்கு கிடைத்த நேரத்தில் இந்தியா - இலங்கை தொடரை நேரலையில் கண்டு ரசித்துள்ளனர்.

 

அதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, அஜிங்கியா ரஹானே என அனைவரும் இந்தியா - இலங்கை தொடரை கண்டுரசிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை