பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய இரண்டு நாடுகளும் இணைந்து நடத்தும் 2023 ஒரு நாள் ஆசிய கோப்பை தொடரில் சீனியர் வீரர்கள் இல்லாத இந்திய ஏ அணியை இளம் வீரர் யாஷ் துல் வழிநடத்தி வருகிறார். அதன்படி ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான முதல் போட்டியில் யாஷ் துல் சதமடித்து இந்திய அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.

Advertisement

இப்போட்டியில் 84 பந்துகளை எதிர்கொண்ட யாஷ் துல் 20 பவுண்டரி, ஒரு சிக்சர் என 108 ரன்களைச் சேர்த்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார். இந்நிலையில், ஆசிய தொடர் குறித்தான சுவாரசியமான கருத்துக்களை வெளிப்படையாக பேசிய இந்திய ஏ அணியின் கேப்டன் யாஷ் துல்.,எதிர்வரும் தொடர் குறித்து பேசியதோடு ,விராட் கோலி குறித்தும் சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து பேசிய யாஷ் துல், “நான் விராட் கோலியை இரண்டு அல்லது மூன்று முறை சந்தித்திருப்பேன். அவர் தொலைக்காட்சியில் பார்ப்பதை விட நேரில் மிகவும் வித்தியாசமானவர். எனவே நான் அவரிடம் நல்ல நட்பை ஏற்படுத்திக் கொண்டேன். அவரிடமிருந்து அதிகம் கற்றுக் கொள்ள வேண்டும் குறிப்பாக அவருடைய ஆக்ரோஷம் மற்றும் அவர் பயன்படுத்தும் யுக்தி என அனைத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும். அவரிடம் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தால் அவரிடமிருந்து அதிகம் கற்றுக் கொள்ளலாம் என்று எண்ணினேன்” என்று தெரிவித்தார்.

பிறகு பாகிஸ்தான் அணியுடனான போட்டி குறித்து பேசிய அவர், “எங்களுக்கு இது மற்ற போட்டிகளைப் போல் மிகவும் சாதாரண போட்டியாகும். எங்கள் எந்த ஒரு நெருக்கடியும் கிடையாது. நாங்கள் ஒரு அணியாக விளையாட திட்டமிட்டுள்ளோம். முடிவு குறித்து எந்த ஒரு எண்ணம் எங்களுக்கு கிடையாது. அந்த போட்டியில் நெருக்கடி என்பது நிச்சயம் இருக்கும், ஆனால் அதை சமாளிக்கும் வழியும் இருக்கும். நாங்கள் நெருக்கடியை சந்திக்கிறோமா அல்லது ரசித்து விளையாடுகிறோமோ என்பது எங்களுடைய கையில் தான் உள்ளது” என்று தெரிவித்துள்ளார் 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News