லங்கா பிரீமியர் லீக் தொடரின் 4ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 4ஆவது லீக் போட்டியில் ஜாஃப்னா கிங்ஸ் - தம்புலா ஆரா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ர ஜாஃப்னா அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்து களமிறங்கியது. 

Advertisement

அதன்படி காளமிறங்கிய அந்த அணிக்கு சரித் அசலங்கா - ரஹ்மனுல்லா குர்பாஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் குர்பாஸ் 14 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய தாஹித் ஹிரிடோய் 24 ரன்களுக்கும், பிரியமால் பெரேரா 5 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இருப்பினும் தொடக்க வீரராக களமிறங்கிய சரித் அசலங்கா அரைசதம் கடந்தார். 

Advertisement

பின் 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 56 ரன்களை எடுத்த நிலையில் அவர் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் திசாரா பெரேரா 6, ஹர்டுஸ் 4 ரன்கள் என விக்கெட்டை இழந்தனர். அதனைத்தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டேவிட் மில்லரும் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஜாஃப்னா கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்களை எடுத்தது. 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய தம்புலா அணிக்கு அவிஷ்கா ஃபெர்னாண்டோ - குசால் மெண்டிஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் குசால் மெண்டிஸ் 29 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய சதீரா சமரவிக்ரமா 12 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 

இதையடுத்து ஃபெர்னாண்டோவுடன் இணைந்த குசால் பெரேரா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பாக விளையாடிய அவிஷ்கா ஃபெர்னாண்டோ அரைசதம் கடந்துடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 52 ரன்களையும், குசால் பெரேரா 34 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். 

இதன்மூலம் தம்புலா ஆரா அணி 16.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஜாஃப்னா கிங்ஸை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியில் அரைசதம் கடந்த அவிஷ்கா ஃபெர்னாண்டோ ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News