எல்பிஎல் 2023: கொழும்புவை 146 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது ஜாஃப்னா!
லங்கா பிரீமியர் லீக் தொடரின் 4ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்றுவரும் 13ஆவது லீக் ஆட்டத்தில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் - ஜாஃப்னா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சைந் நடத்திவருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற கொழும்பு அணி முதலில் பேட்டிங் செய்தவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு பதும் நிஷங்கா - பாபர் ஆசாம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 57 ரன்களைச் சேர்த்தனர். அதன்பின் 36 ரன்களில் பதும் நிஷங்கா ஆட்டமிழக்க, கேப்டன் பாபர் ஆசாமும் 24 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய லஹிரு உதானா 29 ரன்களையும், நுவனிந்து ஃபெர்னாண்டோ 2 ரன்களுக்கும், இஃப்திகார் அஹ்மத் 2 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த முகமது நவாஸ் - சமிகா கருணரத்ணே இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்து விக்கெட் இழப்பை தடுத்தனர்.
அதன்பின் 27 ரன்கள் எடுத்த முகமது நவாஸும் விக்கெட்டை இழக்க, இறுதிவரை களத்தில் இருந்த கருணரத்னே 21 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் கொழும்பு அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்களைச் சேர்த்தது. ஜாஃப்னா அணி தரப்பில் தில்ஷன் மதுசங்கா, துனித் வல்லலகே தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.