ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்க அணிகள் இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி மெக்காய் நகரில் இன்று நடைபெற்றது.

Advertisement

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 49.1 ஓவரில் 277 ரன்களில் ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக மேத்யூ பிரீட்ஸ்கி 88 ரன்களும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 74 ரன்களையும் அடித்தனர். ஆஸ்திரேலியா அணி தரப்பில் ஆடம் ஜம்பா 3 விக்கெட்டுகளையும், மார்னஸ் லபுஷாகே, நாதன் எல்லிஸ் உள்ளிட்டோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Advertisement

அதன்பின் 278 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜோஷ் இங்கிலிஸ் 87 ரன்களையும், கேமரூன் கிரீன் 37 ரன்களையும் எடுத்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் 37.4 ஓவர்கள் தாக்குப்பிடித்த ஆஸ்திரேலிய அணி 193 ரன்களில் ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க தரப்பில் இங்கிடி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதன் மூலம் 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் நிகிடி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதன் மூலம் இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதும் லுங்கி இங்கிடிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது போட்டியில் ஆகஸ்ட் 24ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் மேத்யூ பிரீட்ஸ்கி அரைசதம் கடந்து அசத்தியதன் மூலம் வரலாற்று சாதனை படைத்துள்ளார். அதன்படி இப்போட்டியில் பிரீட்ஸ்கி அரைசதம் கடந்ததன் மூலம், தனது ஒருநாள் கேரியரில் முதல் 4 போட்டிகளில் அரைசதம் அல்லது அதற்கு மேல் அடித்த உலகின் முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் எந்த வீரரும் இந்த சாதனையை படைத்து கிடையாது. 

ஒருநாள் போட்டிகளில் மேத்யூ பிரீட்ஸ்கேவின் சாதனை

  •  நியூசிலாந்துக்கு எதிராக 150, லாகூர்
  • பாகிஸ்தானுக்கு எதிராக 83, கராச்சி
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 57, கெய்ர்ன்ஸ்
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 88, மெக்கே
Also Read: LIVE Cricket Score
Advertisement

அது மட்டுமல்லாமல், தனது முதல் நான்கு ஒருநாள் இன்னிங்ஸ்களில் அரைசதம் அல்லது அதற்கு மேல் அடித்த உலகின் இரண்டாவது வீரர் என்ற பெருமையை மேத்யூ பிரீட்ஸ்கே பெற்றுள்ளார், அவருக்கு முன்பு இந்த சாதனையை இந்தியாவின் நவ்ஜோத் சிங் சித்து படைத்திருந்தார். ஆனால் அவர் ஐந்து போட்டிகளில் விளையாடிய இந்த சாதனையைப் படைத்திருந்தார். ஏனெனில் ஒரு போட்டியில் அவருக்கு பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை. 

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News