ஃபாஃப் – மேக்ஸி இந்தப் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடினார்கள் - விராட் கோலி!

Updated: Sun, Apr 23 2023 20:57 IST
Image Source: Google

ஐபிஎல் 16ஆவது சீசனில் இன்று நடைபெற்ற 32ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாசை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு டூ பிளெசிஸ் 62, மேக்ஸ்வெல் 77 ரன்கள் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ரன்களை எடுத்தது.

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிரடி வீரர் ஜோஷ் பட்லர் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க, இரண்டாவது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால் மற்றும் படிக்கல் மிகச் சிறப்பாக விளையாடி 98 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, முறையே 47, 52 ரன்கள் எடுத்த தந்தாலும் அது வெற்றிக்கு போதுமானதாக அமையவில்லை. 

கடைசி ஓவரில் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முதல் மூன்று பந்துகளில் அஸ்வின் 10 ரன்கள் எடுத்து நான்காவது பந்தில் ஆட்டம் இழக்க, பரபரப்பான இந்த போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹர்சல் படேல் சிறப்பாக பந்து வீசி 32 ரன்கள் தந்து நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றி வெற்றிக்கு இரண்டாவது பகுதியில் முக்கியக் காரணமாக இருந்தார்.

இந்த போட்டியின் வெற்றிக்கு பின் பேசிய ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி, “உண்மையைச் சொல்வதென்றால் நாங்கள் டாஸி போது விவாதித்தோம். ஆடுகளம் மிகவும் வறட்சியாக காணப்பட்டது. மின்விளக்குகளின் கீழ் கடைசி பத்து ஓவர்கள் விளையாடுவது கடினமாக இருக்கும் என்று சொன்னேன். இது மிகவும் கடினமானது. இம்பேக்ட் பிளேயர் ரூல்ஸ் காரணமாக ஆட்டங்கள் மிகவும் நெருக்கமாக செல்கின்றன. சென்னைக்கு எதிரான ஆட்டத்தை விட ஃபாஃப் – மேக்ஸி இந்தப் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடினார்கள். 

மேக்ஸ்வெல் விளையாடிய நான்கு ஓவர்களிலேயே ஆட்டத்தை திருப்பி விட்டார். 160 ரன்கள் போதுமானது என்று நினைத்தோம். ஆனால் அவர்கள் பேட்டிங் செய்த விதத்தில் 190 ரன்கள் எங்களுக்கு உதவியாக இருந்தது. முகமது சிராஜ் கடந்த காலங்களில் மிகச்சிறப்பாக பந்து வீசி இருக்கிறார். அவர் புதிய பந்துடன் நல்ல நோக்கத்தை காட்டுகிறார். அவர் பர்பில் தொப்பியை வைத்திருப்பதற்கான காரணத்தைக் காட்டியுள்ளார். 

அடுத்த ஆட்டத்தில் ஜோஸ் ஹேசில்வுட் வருவார் என்று நம்புகிறேன். அவர் எப்பொழுதும் கடினமான ஓவர்களை வீசுவார். சின்னசாமி மைதானத்தில் பந்து வீசுவது எளிதல்ல. டெல்லிக்கு எதிரான ஆட்டத்தை போலவே இன்றும் சிராஜ் ஆட்டத்தை முடித்து விட்டார். ஜோஸ் வரும்பொழுது நாங்கள் வித்தியாசமான தாக்குதலை கொண்ட அணியாக மாறிவிடுவோம்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை