இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க வீரராக விளையாடி வரும் மாயங்க் அகர்வால் தனது டெஸ்ட் கெரியரின் ஆரம்பகட்ட போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் அதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக சதம் அடிக்காமல் கஷ்டப்பட்டு வந்தார். 

Advertisement

அதோடு மும்பை டெஸ்டுக்கு முன்னர் கடைசியாக விளையாடிய 10 இன்னிங்ஸ்களில் அவர் ஒருமுறை கூட 50+ ரன்களை கடக்க முடியாமல் தவித்து வந்தார். இந்நிலையில் நடைபெற்று முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரின் போது மும்பை டெஸ்டின் முதல் இன்னிங்சில் 150+ ரன்களை அடித்த அவர் இரண்டாவது இன்னிங்சிலும் 65 ரன்கள் அடித்து அசத்தினார்.

Advertisement

இந்திய அணி இந்த போட்டியில் 372 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை அடைய அவரது ரன் குவிப்பும் காரணமாக அமைந்தது. இந்நிலையில் தற்போது ராகுல் மற்றும் ரோகித் ஆகியோர் ஓய்வில் இருந்த வேளையில் மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்து வரும் தென் ஆப்பிரிக்கா செல்லும் சுற்றுப்பயணத்திலும் இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் அந்த மும்பை டெஸ்ட் போட்டியின் போது ராகுல் டிராவிடின் அறிவுரை எந்த அளவிற்கு அவரது ஆட்டத்திற்கு உதவியது என்பது குறித்து அவர் பேசியுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “டிராவிட் சார் மும்பை போட்டிக்கு முன்னர் என்னிடம் வந்து “எனக்குத் தெரியும் நீ சமீபகாலமாகவே அதிக ரன்களை குவிக்கவில்லை , இருந்தாலும் உனது மன ஓட்டங்களை கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும். உன்னுடைய மனதளவில் நீ தடைகளை எதிர்கொள்ள தயாராக இருந்தால்தான் போட்டியின் போது நல்ல தெளிவான மனநிலை கிடைக்கும். எனவே மனதளவில் போட்டியில் பெரிய ரன்கள் அடிக்க தயாராக இரு நிச்சயம் அது உனக்கு உதவும் என்று கூறினார்.

மேலும் டெக்னிக்கலாக உனது பேட்டிங்கில் எவ்வித மாற்றமும் தேவையில்லை நிச்சயம் உன்னால் பெரிய ரன்களை குவிக்க முடியும் என்றும் எனக்கு சில அட்வைஸ்களை கொடுத்தார். அப்போது எனக்கு ஒரு விஷயம் நன்றாக புரிந்தது. டெக்னிக்கலாக நாம் எந்த மாற்றத்தையும் செய்ய வேண்டாம். மனதளவில் நாம் போட்டியை எதிர்கொள்ள தயாராக இருந்தால் போதும் நிச்சயம் பெரிய ஸ்கோர் வரும் என்று எண்ணினேன்.

Advertisement

அதன்படி மும்பை டெஸ்ட் போட்டியின்போது ஒருமித்த மனதோடு, ஒரே நோக்கத்தோடு ரன்களை குவிக்க வேண்டும் என்று விளையாடினேன். அதன்படி முதல் இன்னிங்சின் போது சதம், இரண்டாவது இன்னிங்சின் போது அரைசதம் வந்தது. என்னுடைய பார்மை மீட்பதற்கு டிராவிட் கொடுத்த அந்த அறிவுரைகளும் ஒரு காரணம்” என்று தெரிவித்தார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News