உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. ஆஸ்திரேலியா – தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்கா அணிக்கு டேவிட் மில்லர் 101 ரன்களும், ஹென்ரிச் கிளாசென் 47 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், மற்ற வீரர்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கூட ரன் குவிக்க தவறியதால் 212 ரன்கள் மட்டுமே எடுத்த தென் ஆப்ரிக்கா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

Advertisement

அதன்பின் 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிதாக ரன் குவிக்காமல் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்ததோடு போட்டியையும் பரபரப்பாக்கி விட்டனர். இலகுவாக வெற்றி பெற வேண்டிய எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தோல்வி பயத்தை கண் முன் காட்டும் அளவிற்கு தென் ஆப்ரிக்கா வீரர்கள் வெற்றிக்காக போராடினாலும், இலக்கு மிக குறைவானது என்பதால் ஆஸ்திரேலிய வீரர்கள் பொறுமையாக விளையாடி 47.2 ஓவரில் இஅக்கை எட்டினர். இதன் மூலம் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, 8ஆவது முறையாக உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கும் தகுதி பெற்றது.

Advertisement

இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த வெற்றிக்கு பிறகு பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், “இந்த போட்டியில் டக் அவுட்டில் அமர்ந்திருப்பதை விட மைதானத்தில் நின்றது சற்று எளிதாக இருந்ததாக நினைக்கிறேன். ஆரம்பத்தில் இரண்டு மணி நேரம் சற்று கடினமாக இருந்தது. பின்னர் சிறப்பாக இலக்கை நோக்கி சென்றதாக நினைக்கிறேன். இந்த போட்டியில் ஸ்டார்க் மற்றும் ஹேசல்வுட் ஆகியோர் முன்கூட்டியே ஓவர்களை வீசுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

மேலும் இந்த போட்டியில் நிச்சயம் சுழற்பந்து வீச்சுக்கு சாதாகமாக இருக்கும் என்று ஏற்கனவே நான் கணித்தேன். அதேபோன்று இந்த மைதானத்தின் தன்மையை பொறுத்து முதலில் பந்து வீசுவதை நான் பெரிதாக நினைக்கவில்லை. இந்த போட்டியில் நாங்கள் மிகச் சிறப்பாக ஃபீல்டிங் செய்துள்ளோம். ஆனால் இங்கு தொடரின் ஆரம்பத்தில் அதுபோன்று இல்லை இருப்பினும் இந்த போட்டியில் எங்களது பீல்டிங் மிகச் சிறப்பாக இருந்தது.

அதே போன்று ஜாஸ் இங்கிலீஷ் மிகவும் அற்புதமாக பேட்டிங் செய்தார். டிராவிஸ் ஹெட் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே கை கொடுத்தார். எங்களில் சிலர் இதற்கு முன்னதாகவே உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடியுள்ளோம். அதேபோன்று இன்னும் சிலர் டி20 உலக கோப்பையில் விளையாடியுள்ளோம். அதனால் இறுதிப்போட்டியை நினைத்து கவலை இல்லை. இருப்பினும் இந்திய அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் மைதானம் முழுவதுமாக நிறைந்திருக்கும். 

அதேபோன்று நிச்சயம் மைதானம் முழுவதும் ஒரு சார்பாக இந்திய அணிக்கு மட்டுமே ஆதரவாக இருக்கும். மேலும் 2015 ஆம் ஆண்டு இறுதிப்போட்டியில் நான் விளையாடியது என் கரியரிலேயே மிகவும் சிறப்பான ஒன்று. அதன் பின்னர் நான் இந்தியாவில் உலகக்கோப்பை இறுதி போட்டியில் விளையாடுவேனா என்று தெரியாது. ஆனால் தற்போது அந்த போட்டியை எதிர்நோக்கி கார்த்திருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News