ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று டெல்லியில் நடைபெற்ற லீக் போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.

Advertisement

தலைநகர் டெல்லியில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் சிறப்பாக விளையாடி 284 ரன்கள் சேர்த்தது.அதிகபட்சமாக ரஹமதுல்லா குர்பாஸ் 80 ரன்களும் இக்ரம் கில் 58 ரன்களும் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஆதில் ரஷித் 3 விக்கெட்களை சாய்த்தார். ஆனால் 285 ரன்கள் துரத்திய இங்கிலாந்து ஆரம்ப முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து ஆஃப்கானிஸ்தானின் தரமான சுழல் பந்து வீச்சில் 40.3 ஓவரில் 215 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியை சந்தித்தது. 

Advertisement

இந்நிலையில் இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் பேசுகையில், “இங்கிலாந்து போன்ற பெரிய அணிகளுக்கு எதிராக விளையாடும் போது அனைவருக்கும் அழுத்தம் என்பது அதிகமாகவே இருக்கும். ஆனால் நான் எனது பாணியில் கிரிக்கெட் விளையாட வேண்டும் என நினைத்தேன். இப்போட்டிக்கு மட்டுமில்லாமல் தொடரின் அனைத்து போட்டிகளிலும் நான் அழுத்தமின்றி அதிரடியாக விளையாட வேண்டும் என முடிவுசெய்தேன்.

அதற்கேற்றவாறு அழுத்தமின்றி வேகப்பந்துவீச்சு, ஸ்பின்னர் என அனைவருக்கும் எதிராகவும் நான் அதிரடியாக விளையாட வேண்டும் என்பதே நோக்கமாக வைத்திருக்கிறேன். அதற்கேற்றவாரு நான் இப்போட்டியில் அதிரடியாக விளையாடில் மகிழ்ச்சியாக உள்ளேன். ஆனால் எதிர்பாரதவிதமாக சதத்தை தவறவிட்டது வருத்தமளிக்கிறது. ஆனாலும் போட்டியில் வெற்றிபெற்றது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News