ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான பாரம்பரிய டெஸ்ட் தொடரான ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்துவருகிறது. இந்த தொடரில் இங்கிலாந்து அணி யாரும் எதிர்பார்த்திராத அளவிற்கு படுமோசமாக ஆடிவருகிறது. பேட்டிங், பவுலிங் என அனைத்துவகையிலும் சொதப்பிவருகிறது.

Advertisement

பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்ட்டில் 9 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த இங்கிலாந்து அணி, அடிலெய்டில் நடந்த பகலிரவு டெஸ்ட்டில் 275 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து இந்த ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவிடம் 2-0 என பின்னடைவை சந்தித்துள்ளது. 

Advertisement

அடிலெய்டில் நடந்த 2ஆவது டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணியில் பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட் ஆகிய 2 முக்கியமான பவுலர்கள் ஆடவில்லை. அப்படியிருந்தும் கூட, முதல் இன்னிங்ஸில் 236 ரன்களுக்கும் 2ஆவது இன்னிங்ஸில் வெறும் 192 ரன்களுக்கும் ஆல் அவுட்டானது இங்கிலாந்து அணி. 

கடைசி நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 6 விக்கெட்டுகள் தேவைப்பட்ட நிலையில், ஜோஸ் பட்லர் மட்டும் ஒருமுனையில் நங்கூரமிட்டு ஆட்டத்தை டிரா செய்ய போராடினார். 200க்கும் அதிகமான பந்துகளை எதிர்கொண்டார்.  ஆனால் தேநீர் இடைவேளைக்கு பிறகு 9ஆவது விக்கெட்டாக அவர் ஆட்டமிழக்க, எஞ்சிய ஒரு விக்கெட்டை ஆஸ்திரேலிய அணி எளிதாக வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இங்கிலாந்துக்கு அணிக்கு பாசிட்டிவான விஷயம் என்றால், ஜோஸ் பட்லரின் பேட்டிங் தான். பட்லர் 200 பந்துகளுக்கு மேல் ஆடியது இங்கிலாந்து அணிக்கு நல்லது. பொதுவாக அடித்து ஆடக்கூடிய பட்லர், இந்த போட்டியில் முழுக்க முழுக்க தடுப்பாட்டம் ஆடி, இங்கிலாந்தை காப்பாற்ற போராடினார்.

இந்நிலையில், அவரது பேட்டிங்கை பாராட்டி பேசிய மைக் ஹஸ்ஸி, “மிகச்சிறப்பு.. கடந்த மாதம் டி20 உலக கோப்பையில் ஒவ்வொரு பந்தையும் அடித்து ஆடி மைதானத்திற்கு வெளியே அனுப்பிய பட்லர், இப்போது டெஸ்ட் போட்டியில் அணியை காப்பாற்ற முழுக்க முழுக்க தடுப்பாட்டம் ஆடுகிறார். அவர் பேட்டிங் ஆடும் விதம் அபாரம். மிகச்சிறப்பான முயற்சி” என்று புகழ்ந்துள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News