பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது அமீர் தற்போது பிரிட்டிஷ் குடியுரிமை பெற இருக்கிறார். இளம் வயதிலேயே பாகிஸ்தான் அணிக்காக விளையாடி சர்வதேச கிரிக்கெட்டில் அபார தாக்கத்தை ஏற்படுத்தியவர் முகமது அமீர். ஆனால் 2010 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் ஸ்பாட் பிக்சிங் செய்து ஐந்து ஆண்டுகள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க முகமது அமீர் தடை விதிக்கப்பட்டது. 

Advertisement

இந்த நிலையில் மீண்டும் 2016 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக முகமது அமீர் விளையாடினார். அதன் பிறகு, 2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன் பிறகு இங்கிலாந்தில் தங்கி உள்ள முகமது அமீர் அங்கு உள்ள கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். தற்போது முகமது அமீர் பிரிட்டன் குடியுரிமை பெற இன்னும் ஒரு ஆண்டு தான் தேவைப்படுகிறது. நடப்பாண்டு இறுதியில் எல்லாம் அவர் இங்கிலாந்து குடிமகனாக மாறிவிடுவார்.

Advertisement

இதன் மூலம் அவருக்கு பிரிட்டன் பாஸ்போர்ட் வழங்கப்படும். இதன் பிறகு முகமது அமீர் இங்கிலாந்து அணிக்காக கூட விளையாட வாய்ப்பு ஏற்படலாம். மேலும் அமீர் இங்கிலாந்து குடிமகனாக மாறிவிட்டால் அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்கவும் எந்த தடையும் இல்லை. இதுகுறித்து பேசிய முகமது அமீர் இங்கிலாந்து அணிக்காக விளையாடும் எண்ணம் எனக்கு இதுவரை இல்லை.

ஆனால் ஐபிஎல் தொடரில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் விளையாடுவேன். தான் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்பது குறித்து எந்த அணி உரிமையாளர்களிடம் பேசவில்லை. ஐபிஎல் தொடரில் என்ன நடக்கிறது என்று நம் அனைவருக்குமே தெரியும். ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது.

சில வீரர்கள் இந்த கருத்தை கூறி வருகிறார்கள். ஆனால் பலரும் வெளிப்படையாக பேசுவதில்லை என்று முகமது அமீர் கூறியுள்ளார். பாகிஸ்தான அணியின் ஆல்ரவுண்டராக இருந்த அசார் முகமத், இங்கிலாந்தில் குடியுரிமை பெற்ற பிறகு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே பாணியில் முகமது அமீரும் ஐபிஎல் தொடரில் அடுத்த ஆண்டு வருவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News