இந்திய கிரிக்கெட்டில் மிகத் தாக்கம் நிறைந்த வீரர் என்றால் சில காலங்களுக்கு முன்பு வரை பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என கபில்தேவ் முன்னணியில் இருந்தார். ஆனால் தற்காலத்தில் பேட்டிங், கீப்பிங், கேப்டன்சி, பினிஷிங் என நான்கு துறைகளில் மிகவும் தாக்கத்தை தரக்கூடிய வீரராக மகேந்திர சிங் தோனிதான் முன்னணியில் இருக்கிறார் .

Advertisement

சர்வதேச கிரிக்கெட்டை விட்டு வீரர்கள் ஓய்வு பெற்ற பிறகு அவர்களுடைய புகழ் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கும். இதற்கு எந்த வீரர்களும் விதிவிலக்காக இருந்தது கிடையாது. ஆனால் உலக கிரிக்கெட் மகேந்திர சிங் தோனிக்கு மட்டும்தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் புகழ் ஒவ்வொரு வருடமும் அதிகமாகிக் கொண்டே போகிறது.

Advertisement

தற்போது 40 வயதை தாண்டிய அவர் கேப்டனாக ஐபிஎல் தொடரில் இந்த வருடம் கோப்பையை வென்று அசத்தியிருக்கிறார். மேலும் அடுத்த வருடமும் ஐபிஎல் விளையாட தயாராக இருக்கிறார். இந்த நிலையில் மகேந்திர சிங் தோனி நீண்ட தலை முடியுடன் ஆரம்ப காலத்தில் வந்தது போல தன்னுடைய கடைசி வருட கிரிக்கெட் விளையாட்டின் காலத்திலும் ரசிகர்களுக்காக வருகை தர இருக்கிறார் என்கின்ற செய்தி தற்பொழுது வந்திருக்கிறது. 

 

மேலும் கரோனா காலத்தில் மகேந்திர சிங் தோனியின் புகைப்படத்தை கேலி செய்தவர்களுக்கு, தற்பொழுது வெளியாகி இருக்கும் புகைப்படம் ஆச்சரியமான பதிலடி தந்திருக்கிறது என்றே கூறலாம். மகேந்திர சிங் தோனியின் சிகை அலங்கார நிபுணர் கூறும் பொழுது “மகேந்திர சிங் தோனி உடன் பழகுவதற்கு இது ஒரு அற்புதமான வாய்ப்பாகும். மேலும் என்னுடைய சிகை அலங்கார திறமையை வெளிப்படுத்த கிடைத்த வாய்ப்பிற்கு பெருமை கொள்ளக் கூடியவனாகவும் நன்றி உடையவனாகவும் இருக்கிறேன்.

கடந்த ஐபிஎல் தொடரின் போது எல்லோரும் தலைமுடியை மிகவும் சிறியதாக வெட்டி கொண்டு இருந்த பொழுது, அந்த நேரத்தில் தோனி என்னிடம் ஒரு புகைப்படத்தை காட்டினார். அது நீண்ட தலைமுடியுடன் அவர் இருக்கும், அவரது ரசிகர்கள் உருவாக்கிய புகைப்படமாகும். நான் அந்த புகைப்படத்தை பார்த்து மயங்கி அவரை தலைமுடியை வளர்க்கச் சொன்னேன். 

Advertisement

அவரது தலைமுடியை வெட்டக்கூடாது வளர்க்க வேண்டும் என்று இருவரும் முடிவெடுத்தோம். வளர்ந்த பிறகு வெட்டி ஸ்டைல் செய்து கொள்ளலாம் என்று நினைத்தோம். மகி பாயின் நீண்ட தலை முடி சிகை அலங்காரத்திற்கு நான் ரசிகனாக இருந்தேன். முடிக்கு புதிய அமைப்பையும் வண்ணத்தையும் கொடுக்க நாங்கள் விரும்பினோம். அவருடைய இந்த சிகை அலங்காரம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று, நான் ரசிக்கிறேன்” என்று கூறியுள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News