எஸ்ஏ20 2025: முஜீப் உர் ரஹ்மானை ஒப்பந்தம் செய்தது பார்ல் ராயல்ஸ்!
இந்தியாவில் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடரை பின் பற்றி உலகின் பல்வேறு நாடுகளும் டி20 பிரீமியர் லீக் தொடர்களை நடத்தி வருகின்றனர். அந்தவகையில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியமும் கடந்தாண்டு முதல் எஸ்ஏ20 என்றழைக்கப்படும் டி20 தொடரை நடத்தில் வருகிறது. தற்போதுவரை இரண்டு சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ள எஸ்ஏ20 லீக் தொடரானது மூன்றாவது சீசனுக்காக தற்போதில் இருந்தே தயாராகி வருகிறது.
மேற்கொண்டு நடைபெற்று முடிந்த இரண்டு எஸ்ஏ20 லீக் தொடரிலும் ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்கேப் அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. இந்நிலையில் அடுத்த தொடருக்கான பணிகளை எஸ்ஏ20 தொடரில் பங்கேற்கும் அணிகள் தற்போதில் இருந்தே தொடங்கியுள்ளன. அந்தவகையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் ஏலத்திற்கு முன்னரே வீரர்களை ஒப்பந்தம் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றன.
அந்தவகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களுடைய பார்ல் ராயல்ஸ் அணியும் 2025ஆம் ஆண்டிற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி அந்த அணியானது வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாகவே இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் மற்றும் இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் ஆகியோரை ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில் தற்சமயம் மேலும் ஒரு வீரரையும் அந்த அணி ஏலத்திற்கு முன்னதாக ஒப்பந்தம் செய்துள்ளது.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
அதன்படி, ஆஃப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர் முஜீப் உர் ரஹ்மானை அந்த அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இதுவரை ஆஃப்கானிஸ்தான் அணிக்காக 46 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 59 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதுமட்டுமின்றி உலகளவில் 241 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள முஜீப் உர் ரஹ்மான் 257 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.