மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்த எட்டு அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரின் லீக் சுற்றின் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. 

Advertisement

அதேசமயம் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் எலிமினேட்டர் சுற்றுக்கு முன்னேறினர். இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான எலிமினேட்டர் சுற்று ஆட்டமானது மும்பையில் உள்ள பிரபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு டபிள்யூபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய இரண்டு போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் அணியே வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.

Advertisement

இதனால் இப்போட்டியிலும் அந்த அணி ஆதிக்கம் செலுத்துமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மறுபக்கம் முதல் முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப்பெற்றுள்ள குஜராத் ஜெயண்ட்ஸ் அணி இறுதிப்போட்டிக்கும் முன்னேறி சாதிக்குமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் நாட் ஸ்கைவர் பிரண்டு சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். 

அந்தவகையில், குஜராத் ஜெயண்ட்ஸுக்கு எதிரான இந்த அரையிறுதி போட்டியில் நாட் ஸ்கைவர் பிரண்ட் 53 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் மகளிர் பிரீமியர் லீக் தொடர் வரலாற்றில் அதிக ரன்களைக் குவித்த வீராங்கனை எனும் ஆர்சிபி வீராங்கனை எல்லிஸ் பெர்ரியின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். முன்னதாக எல்லிஸ் பெர்ரி 25 போட்டிகளீல் 64.80 என்ற சராசரியில் 972 ரன்களைக் குவித்து அதிக ரன்களை அடித்த வீராங்கனை பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். 

அதேசமயம் நாட் ஸ்கைவர் பிரண்ட் டபிள்யூபிஎல் தொடரில் இதுவரை 27 போட்டிகளில் விளையாடி 920 ரன்களைக் குவித்து அதிக ரன்கள் குவித்த வீராங்கனைகள் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் மெக் லெனிங் 26 போட்டிகளில் விளையாடி 939 ரன்களைக் குவித்து இரண்டாம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

நடப்பு டபிள்யூபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீராங்கனையாக திகழும், நாட் ஸ்கைவர் பிரண்ட் 8 போட்டிகளில் மட்டுமே விளையாடி 69.33 என்ற சராசரியில் 416 ரன்களைக் குவித்து அசத்தியுள்ளார். இதன்மூலம் மகளிர் பிரீமியர் லீக் வரலாற்றில் ஒரே சீசனில் 400 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்த முதல் வீராங்கனை என்ற சாதனையையும் அவர் படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News