டி20 உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற 4ஆவது ஆட்டத்தில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து நெதர்லாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய நெதர்லாந்து அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 181 ரன்களை குவித்தது. 

Advertisement

அந்த அணியில் அதிகபட்சமாக மைக்கேல் லெவிட் 55 ரன்களையும், கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 27 ரன்களையும் சேர்த்தனர். இலங்கை அணி தரப்பில் தில்சன் மதுஷங்கா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - குசால் மெண்டிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் நிஷங்கா 5 ரன்களிலும், மெண்டிஸ் 4 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். 

Advertisement

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கமிந்து மெண்டிஸ் 05 ரன்களுக்கும், சரித் அசலங்கா 12 ரன்களுக்கும், ஏஞ்சலோ மேத்யூஸ் 15 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். பின்னர் இணைந்த கேப்டன் வநிந்து ஹசரங்கா - தசுன் ஷனகா இணை அதிரடியாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்ல முயற்சித்தனர். 

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்து வநிந்து ஹசரங்கா அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்ஸர்களையும் விளாசி 15 பந்துகளில் 43 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தசுன் ஷனகா 20 பந்துகளில் 35 ரன்களைச் சேர்த்தார். ஆனால் மறுபக்கம் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். 

இதனால் இலங்கை அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 161 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நெதர்லாந்து அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஆர்யன் தத் 3 விக்கெட்டுகளையும், கைல் கெலின் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதன்மூலம் நெதர்லாந்து அணியானது 20 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News