இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவந்த இலங்கை அணி டி20 தொடரை 2-1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் இழந்தது. இதில் நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.

Advertisement

இப்போட்டியில், 110 பந்துகளில் 166 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருதை விராட் கோலி பெற்றார்.இந்த இன்னிங்ஸில் அதிகபட்சமாக அவர் 8 சிக்ஸர்களை விளாசினார். 13 பவுண்டரிகளையும் அவர் அடித்தார். சொந்த மண்ணில் அதிக சதம் விளாசிய சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ள விராட் கோலி ஒட்டுமொத்தமாக ஒரு நாள் கிரிக்கெட்டில் 46ஆவது சதத்தை அடித்திருக்கிறார். மேலும் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஜெயவர்த்தனேவைப்பின்னுக்கு தள்ளி விராட் கோலி ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறார். 

Advertisement

இந்த நிலையில் தொடர் நாயகன் விருது வென்றது குறித்து பேசிய விராட் கோலி, “நான் விருதுகளுக்காகவும் சாதனைகளுக்காகவும் இப்போது விளையாடுவதில்லை. இதெல்லாம் நம் வெற்றிக்கு கிடைக்கும் ஒரு கூடுதல் பரிசாக தான் நான் இப்போது பார்க்கிறேன். என்னுடைய மனநிலை எல்லாம் இந்திய அணிக்கு வெற்றியை பெற்று தர வேண்டும். ஆடுகளத்தில் அதிக நேரம் நின்று பேட்டிங் செய்ய வேண்டும். இது மட்டும் தான் தற்போது என்னுடைய மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது. 

இப்படி செய்தால் நல்ல வித்தியாசம் ஏற்படுவதை உணர்கிறேன். நான் எதற்காக விளையாட வேண்டும் என்று சரியான காரணம் எனக்கு தெரியும். அணிக்காக எந்த அளவுக்கு என்னால் வெற்றி பெற்று தர முடியுமோ அதுவரை எனக்கு மகிழ்ச்சி தான். முன்பெல்லாம் என்னால் முடியவில்லை என்றால் கூட, கடுமையாக மனசை போட்டு அழுத்திக்கொண்டு அதை முடிக்க பார்ப்பேன். இப்போதெல்லாம் அப்படி நினைப்பதில்லை. அன்றைய நாள் எனக்கு என்ன தோன்றுகிறதோ அதை நான் செய்கிறேன். 

மனதிற்கும் உடலுக்கும் அழுத்தம் கொடுப்பதை நிறுத்தி விட்டேன். என்னுடைய பேட்டிங்கை நான் மகிழ்ச்சியாக விளையாடுகிறேன். இப்போது எல்லாம் மனதளவிலும் ரிலாக்ஸ் ஆக இருக்கிறேன்ம் இந்த மன நிலையில் நான் தொடர்ந்து வைத்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். முகமது சமி போன்ற திறமையான வீரர்கள் இருக்கும் நிலையில் சிராஜும் தற்போது தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். பும்ராவும் காயத்திலிருந்து விடுபட்டு அணிக்கு திரும்புவார். 

இதனால் எங்கள் அணியின் வேகப்பந்துவீச்சு சிறப்பாக இருக்கிறது. பவர் பிளேவில் எங்களுடைய வீரர்கள் அதிக விக்கெட்களை எடுத்து விடுகிறார்கள். இதற்கு முன்னால் இப்படி நடக்கவில்லை. முகமது சிராஜ் அனைத்து பேட்ஸ்மேன்களையும் யோசிக்க வைக்கிறார். உலகக்கோப்பை நடக்கும் நிலையில் இது இந்திய அணிக்கு ஒரு நல்ல அறிகுறியாக பார்க்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News