பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளும் தங்களது முதல் இன்னிங்ஸ் விளையாடிய பிறகு, இங்கிலாந்து அணி 50 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது. இரண்டாவது இன்னிங்களில் இந்த முன்னிலையை உடைத்து 3ஆம் நாள் ஆட்டத்தை விளையாடி வரும் பாகிஸ்தான் அணி, உணவு இடைவெளியின்போது மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 99 ரன்களை எடுத்துள்ளது.

Advertisement

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் அசார் அலி, 3ஆவது டெஸ்டுக்கு முன்பாக, இதுதான் தனது கடைசி டெஸ்ட் போட்டி. இது முடிந்த பிறகு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். முதல் இன்னிங்சில் 45 ரன்கள் அடித்த அவர் இரண்டாவது இன்னிங்ஸில் ரன் ஏதும் எடுக்காமல் ஜாக் லீச் பந்தில் ஆட்டமிழந்தார்.

Advertisement

அசார் அலி ஆட்டமிழந்து பெவிலியன் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, இங்கிலாந்து வீரர்கள் ஒருவர் பின் மற்றொருவராக அவரிடம் ஓடிவந்து கைகுலுக்கி உரிய மரியாதையையும் வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டனர். உணர்வுப்பூர்வமாக கண்ணீருடன் வெளியே நடந்து சென்ற அசார் அலிக்கு பாகிஸ்தான் வீரர்களும் வரிசையாக நின்று மரியாதை செலுத்தினர். இத்தகைய மரியாதைக்கு அசார் அலி மிகவும் தகுதியான வீரரும் கூட.

ஏனெனில் பாகிஸ்தான் அணிக்காக 180 இன்னிங்ஸ்கள் மற்றும் 97 போட்டிகள் விளையாடியுள்ளார். அதில் 7,142 ரன்கள் எடுத்திருக்கிறார். அத்துடன் ஒரு முச்சதம், மூன்று இரட்டை சதங்கள், 19 சதங்கள் மற்றும் 35 அரைசதங்கள் அடித்திருக்கிறார். இவரது சராசரி 42.26. அதிகபட்சம் 302 ரன்கள்.

இப்படி எண்ணற்ற பல பங்களிப்பை கொடுத்திருக்கும் இவருக்கு பாகிஸ்தான் அணி உரிய மரியாதையை செலுத்தி இருக்கிறது. போட்டி முடிந்த பிறகு இன்னும் உரிய மரியாதை செலுத்தப்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா அறிவித்திருக்கிறார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News