மண்டேலாவின் தென் ஆப்பிரிக்க நாட்டில் டி காக் வாழவில்லை - சல்மன் பட்!

Updated: Wed, Oct 27 2021 18:16 IST
'Not South Africa of Nelson Mandela' - Salman Butt questions Quinton de Kock's actions (Image Source: Google)

கறுப்பினத்தவர்கள் மட்டுமின்றி யாருமே இனரீதியாக ஒதுக்கப்படக் கூடாது என்ற கருத்துக்கு ஆதரவாக விளையாட்டு பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியினர் முழங்காலிட்டுக் கறுப்பினத்தவர்களுக்கு ஆதரவாகவும், இனவெறிக்கு எதிராகவும் சபதம் ஏற்றனர்.

இனிவரும் போட்டிகள் அனைத்திலும் தென் ஆப்பிரிக்க வீரர்கள் போட்டி தொடங்கும் முன் முழங்காலிட்டு இனவெறிக்கு எதிராக ஆதரவு தெரிவிப்பார்கள் எனத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டது.

இந்த அறிக்கை வெளியான சில மணி நேரத்துக்குப் பின் தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமா டாஸ் வென்று ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார். வீரர்கள் அனைவரும் முழங்காலிட்டு சபதம் ஏற்க வேண்டிய நிலையில் விக்கெட் கீப்பர் டீ காக் தனிப்பட்ட காரணங்களால் களமிறங்கவில்லை என தென் ஆப்பிரிக்க அணி நிர்வாகம் தெரிவித்தது. இதையடுத்து கிளாசன் களமிறக்கப்பட்டார்.

இனவெறிக்கு எதிராக வீரர்கள் அனைவரும் முழங்காலிட்டு சபதம் ஏற்கும்போது குயின்டன் டீ காக் மட்டும் வராதது பெரும் கண்டனத்தைக் கிளப்பியுள்ளது. ஆனால், டீ காக் முடிவுக்கு மதிப்பளிப்பதாக தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் தனது யூடியூப்பில் இந்த விவகாரம் குறித்துக் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது ''டீ காக் செய்தது புதுவிதமாக இருக்கிறது. இனவெறிக்கு எதிராக அணியில் உள்ள ஒவ்வொருவரும் சபதம் ஏற்கும்போது, மனிதர்கள் அனைவரும் சமம். அவர்களை இனம், நிறத்தின் அடிப்படையில் பிரிக்கக் கூடாது என்று சபதம் ஏற்கும்போது டீ காக் வராதது வியப்பாக இருக்கிறது.

முழங்காலிட்டு இனவெறிக்கு எதிராக சபதம் ஏற்பது என்பது தென் ஆப்பிரிக்க அணியில் ஒவ்வொரு வீரரும் முடிவெடுத்ததுதானே. டீ காக் இந்த முடிவுக்கு ஒத்துழைத்துச் செல்லாத நிலையில், மேலும் பிரிவினையை அதிகப்படுத்துகிறார். எதற்காக இவ்வாறு டீ காக் செய்தார் எனத் தெரியவில்லை.

Also Read: டி20 உலகக் கோப்பை 2021

கறுப்பினத்தவர்களும், வெள்ளையினத்தவர்களும் அதிகமாக இருக்கும் நாட்டில் டீ காக் வாழ்கிறார். ஆனால், நிச்சயம் மண்டேலாவின் தென் ஆப்பிரிக்க நாட்டில் அவர் வாழவில்லை. தென் ஆப்பிரிக்காவில் சூழல் மேம்பட்டதும் அவர்களை மீண்டும் உலகத்தின் நீரோட்டத்தில் மண்டேலா இணைத்தார், மக்களை ஒன்றாக இணைத்தார். ஆனால், அவர் செய்தவை வீணாகிவிட்டன. அவர் சொன்ன செய்தி மிக எளிமையானது. அனைவரும் சமம் என்ற செய்தி மட்டும்தான்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை